படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் உவகை தரும் செயல். நாம் படித்த பள்ளிகளின் மேல் எப்போதுமே நன்மதிப்பு (அல்லது இப்போது இருப்பது சரியில்லை என்பதால் ஏற்படும் ரொமாண்டிசிச எண்ணம்) இருக்கும். கடந்து வந்த பாதைகளுக்கு சரியான தொடக்கம் நம் பள்ளிகள்தான். ரயில் பெட்டிகளே வகுப்பறையாக இருந்த ஒரு பள்ளியைப் பற்றிய கதையே இந்த புத்தகம். சம்பிரதாயமான வார்த்தைகளால் இந்த புத்தகத்தைப் புகழாமல், புத்தகத்தைப் பற்றியும், எனக்கு புரிந்ததைப் பற்றியும் இங்கு எழுதி வைக்க தோன்றியது.
ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகில் இருந்த டோமோயி ஹாகுன் என்ற பள்ளியைப் பற்றிய கதைதான் இந்த புத்தகம். அந்த பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சோசாகு கோபயாஷி என்பவர் இந்த பள்ளியை 1937 இல் தொடங்கினார். 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வீச்சுகளால் பள்ளி தீயில் எரிந்து அழிந்தது. வெறும் 8 ஆண்டுகளே இருந்த ஒரு பள்ளி இன்று ஜப்பானின் பாட புத்தங்களில் கூட இடம்பெற்றிருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட முதல் ஆண்டே 45 இலட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.
டோட்டோ-சான் என்ற சிறுமி ஒரு பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். பாடம் நடத்தும் சமயங்களில் ஜன்னலின் வழியே வேடிக்கைப் பார்ப்பதும், அந்த பக்கம் வரும் இசைக் குழுவினரை அழைத்து அவர்களை இசைக்கச் சொல்வது போன்ற காரணங்களாலும். அவரின் தாயார் அவரை டோமாயின் பள்ளியில் சேர்க்கிறார். சேர்ந்த முதல் நாளிலிருந்தே அந்த பள்ளி டோட்டோ-சானுக்கு பிடித்து விடுகிறது. பழைய ரயில் பெட்டிகள் தான் பள்ளியின் வகுப்பறைகள். அன்பான தலைமையாசிரியர். தினமும் பள்ளியின் மதிய உணவுக்கு மலையிலிருந்து கொஞ்சம் கடலிலிருந்து கொஞ்சம் எடுத்து வரச் சொல்லும் தலைமையாசிரியர். எவருக்கேனும் அதில் குறைவிருந்தால் அதை பரிமாறும் தலைமையாசிரியரின் மனைவி. காலையிலேயே பாடம் அதிகமாக கற்று முடிந்து விட்டால், மதிய உணவிற்கு பிறகு குழந்தைகளை காலாற நடக்க சொல்லும் வகுப்பாசியர்கள் என குழந்தைகளை மகிழச் செய்யும் ஒரு பள்ளி இது.
ஒரு குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது அவர்களை உட்கார வைத்து வெறுமனே பாடங்களை கவனிப்பதற்காக மட்டுமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் அதை நாம் புறக்கணித்துக் கொண்டே வருகிறோம். பள்ளியின் தலைமையாசிரியர் சிறுவர்களை மதித்து அவர்களின் பேச்சுக்கும் செயலுக்கும் தடை போடாமல் இருக்க முடியுமா என்பது ஆச்சரியமே. சக மாணவர்கள் இந்த அளவுக்கு எந்த போட்டியும் இல்லாமல் நண்பர்களாக பழக முடியுமென்பதே ஆனந்தமான அனுபவம். இம்மாதிரியான பள்ளிகளில் படிக்கும் படித்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களே.
படித்து முடிக்கும் வரை மகிழ்ச்சியான மனநிலையுடனே இருந்தேன். ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது விமான குண்டு வீச்சால் பள்ளி முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. கோபயாஷி எவ்வளவோ முயன்றும் மறுபடி பள்ளியை தொடங்க முடியவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த புத்தகத்தை ஆன்லைனில் படிக்க http://blog.balabharathi.net/wp-content/uploads/2012/10/totto-tamil.pdf
ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகில் இருந்த டோமோயி ஹாகுன் என்ற பள்ளியைப் பற்றிய கதைதான் இந்த புத்தகம். அந்த பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சோசாகு கோபயாஷி என்பவர் இந்த பள்ளியை 1937 இல் தொடங்கினார். 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வீச்சுகளால் பள்ளி தீயில் எரிந்து அழிந்தது. வெறும் 8 ஆண்டுகளே இருந்த ஒரு பள்ளி இன்று ஜப்பானின் பாட புத்தங்களில் கூட இடம்பெற்றிருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட முதல் ஆண்டே 45 இலட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது.
டோட்டோ-சான் என்ற சிறுமி ஒரு பள்ளியில் இருந்து வெளியேற்றப்படுகிறார். பாடம் நடத்தும் சமயங்களில் ஜன்னலின் வழியே வேடிக்கைப் பார்ப்பதும், அந்த பக்கம் வரும் இசைக் குழுவினரை அழைத்து அவர்களை இசைக்கச் சொல்வது போன்ற காரணங்களாலும். அவரின் தாயார் அவரை டோமாயின் பள்ளியில் சேர்க்கிறார். சேர்ந்த முதல் நாளிலிருந்தே அந்த பள்ளி டோட்டோ-சானுக்கு பிடித்து விடுகிறது. பழைய ரயில் பெட்டிகள் தான் பள்ளியின் வகுப்பறைகள். அன்பான தலைமையாசிரியர். தினமும் பள்ளியின் மதிய உணவுக்கு மலையிலிருந்து கொஞ்சம் கடலிலிருந்து கொஞ்சம் எடுத்து வரச் சொல்லும் தலைமையாசிரியர். எவருக்கேனும் அதில் குறைவிருந்தால் அதை பரிமாறும் தலைமையாசிரியரின் மனைவி. காலையிலேயே பாடம் அதிகமாக கற்று முடிந்து விட்டால், மதிய உணவிற்கு பிறகு குழந்தைகளை காலாற நடக்க சொல்லும் வகுப்பாசியர்கள் என குழந்தைகளை மகிழச் செய்யும் ஒரு பள்ளி இது.
ஒரு குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது அவர்களை உட்கார வைத்து வெறுமனே பாடங்களை கவனிப்பதற்காக மட்டுமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் அதை நாம் புறக்கணித்துக் கொண்டே வருகிறோம். பள்ளியின் தலைமையாசிரியர் சிறுவர்களை மதித்து அவர்களின் பேச்சுக்கும் செயலுக்கும் தடை போடாமல் இருக்க முடியுமா என்பது ஆச்சரியமே. சக மாணவர்கள் இந்த அளவுக்கு எந்த போட்டியும் இல்லாமல் நண்பர்களாக பழக முடியுமென்பதே ஆனந்தமான அனுபவம். இம்மாதிரியான பள்ளிகளில் படிக்கும் படித்த குழந்தைகள் கொடுத்து வைத்தவர்களே.
படித்து முடிக்கும் வரை மகிழ்ச்சியான மனநிலையுடனே இருந்தேன். ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது விமான குண்டு வீச்சால் பள்ளி முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. கோபயாஷி எவ்வளவோ முயன்றும் மறுபடி பள்ளியை தொடங்க முடியவில்லை. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம். நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்த நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த புத்தகத்தை ஆன்லைனில் படிக்க http://blog.balabharathi.net/wp-content/uploads/2012/10/totto-tamil.pdf
Comments