Skip to main content

Posts

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...
Recent posts

Chasing The Monsoon – Alexander Frater

I first heard of this book from a friend who said one of the sessions in 2018 Vishnupuram Ilakkiya Mukaam (every year in Ooty Narayana Gurukulam) was on this book. Along with a few of my friends, I traveled to the Kanniyakumari district in 2019, when the southwest monsoon was in full flow. We thoroughly enjoyed and immersed ourselves in the deluge in those few days. I started this book in the memory of my monsoon travel. Like before, this small write-up is an appreciation of the book. I love the sentences when it sounds lyrical and poetic. As the writer chases the monsoon, the rhythmic prose comes alive just like the monsoon rains. One such vivid monsoon remark - The wind drops, it gets very dark, there is terrific thunder and lightning and then – the deluge! Suddenly the air is very cool and perfumed with flowers. It is a time of rejoicing. And renewal. Let me share more of such lines I love at the end, just for my revisits. A visit to a neurologist sowed the idea for this t...

கி ரா மற்றும் கோபல்ல கிராமம்

எழுத்தாளர் கிராவின் கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், மறைவாய் சொன்ன கதைகள், கிடை (குறுநாவல்), மாயமான் தொகுப்பில் சில கதைகள் மற்றும் கி.ராஜநாரயணன் கதைகள் தொகுப்பில் சில கதைகள் என வாசித்திருக்கிறேன். புதுவை இளவேனில் தொகுத்த உயிர்க்கோடுகள் நூலின் சில பகுதிகளை கிராவின் எழுத்துக்காகவும் ஓவியர் ஆதிமூலத்தின் அழகான கோட்டோவியங்களுக்காவும் படித்திருக்கிறேன். கோபல்ல கிராமம் நாவலை முதன் முதலில் 2007 ஆம் ஆண்டு வாசித்தேன். நான் வாசித்த கிராவின் முதல் நூல் அது. அனைவரையும் போல அழகான வட்டார எழுத்து எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்போது வாசிக்கும் போது புதிய சில தெளிவுகள் கிடைத்தன.  விடியலை இரவு உயிர்களை முன்வைத்து சொல்லியிருப்பதே அழகாயிருந்தது ( இரவு தூங்க ஆரம்பித்துப் பகல் விழிக்கப் போகும் நேரம். ) பசு / எருமை, தென்னை/பனை போன்றவற்றை பிரம்மா விஸ்வாமித்திரனை முன்வைத்து கிரா எழுதியிருப்பது  // போட்டி உலகத்தை உண்டாக்கிய விஸ்வாமித்திரன்தான் பசுமாடுகளுக்குப் போட்டியாக எருமை மாடுகளையும், தென்னைமரத்துக்குப் போட்டியாக பனை மரத்தையும், மூஞ்சூறுக்குப் போட்டியாக பெருச்சாளியையும் உண்டாக்...

My Husband And Other Animals 2

 I liked the first part of this book and enjoyed it quite a lot. I also wrote a brief on that book (https://www.goodreads.com/topic/show/21297423-2020#comment_208381628). I felt this book fades a bit compared to the first one. There are more personal incidents about Rom, his grandma, Janaki's growing years, their life together.  Also, there are some interesting changes as she wrote more about western ghats in this one. The foremost is the Agumbe & the King Cobras. I liked the chapter on the increasing population of jungle chickens (jungle fowls). Theodore Baskaran wrote about the increasing population of Jungle fowls in Sholas. There is mention about the famous coffee Luwak (Kopi Luwak). I was in Yogyakarta (pronounced Jogjakarta) in 2015. I went to the (BBC) famous Mataram Kopi Luwak and tasted the coffee. I have been drinking coffee since I was 5 years old. I couldn't find any differences, be it good or bad. Though the thought makes you squirm a bit, the coffee was nice ...

அழகர் கோயில் மற்றும் அறியப்படாத தமிழகம்

  நாட்டாரியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகம் புத்தகத்தின் சில பகுதிகளை முன்பே படித்திருக்கிறேன். பண்படுதல் குழும வாசிப்புக்காக அறியப்படாத தமிழகம் மற்றும் அழகர் கோயில் புத்தகங்களை இப்போது படித்தேன். ஏற்கனவே திரு அ.கா.பெருமாளின் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் நூலை முழுமையாகவும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம் நூலின் சில பகுதிகளையும் படித்திருக்கிறேன். திரு.அ.கா.பெருமாளின் சில நாட்டாரியல் ஆய்வு நூல்களையும் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது எப்போதும் மகிழ்ச்சியையும் பால்ய காலத்தின் நினைவுகளையும் தூண்டும். கிராமத்தின் எல்லாத்திசைகளிலும் ஏரி, ஏரிக்கொரு காவல் தெய்வமென்னும் ஊரில் பிறந்து வளர்ந்ததால் இருக்கும். இரண்டில் எனக்கு பிடித்த நூல் அழகர் கோயில் தான். சங்க காலத்திலிருந்து இன்று வரை வாழும் ஆலயத்தை மையமாகக் கொண்ட கதைகள், வரலாற்று சம்பவங்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி தொகுத்தளித்திருக்கிறார்.  காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (தேவராஜர், அத்தி வரதர், கரி வரதர் என்ற பெயர்களுமுண்டு) சித்திரை பௌர்ணமியில் தெற்கு நோக்கி ஏறக்குறைய பத்து கிராமங்களுக்கு வந்து, எங்களூரில...

2020

2014 ஆம் ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்க நிறுவனப் பணிகளின் போது சில (5) மாதங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான். தொடர்ச்சியாக 11 மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை.  அனைவருக்கும் கொரானா. எனக்கிருந்தது வேறு. 2019 டிசம்பரில் தொடங்கி மூன்று முறை அறுவை சிகிச்சை அறைக்கு சென்று வந்தாகிவிட்டது. சிகிச்சைக்காக குழந்தைகளை சிங்கப்பூரில் விட்டுவிட்டு இந்தியா வந்து திரும்பினோம். திரும்பின இரண்டாம் நாளே அனைத்து விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. Close Shave. இந்தியாவில் அறுவைசிகிச்சை முடிந்து ஒரு நாள் ஓய்வெடுத்துத் திரும்பும் வகையிலென்றால் சிங்கப்பூரில் அதே சிகிச்சை காலை 10 மணிக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு திரும்பும் வேகத்தில் நடந்தது. அன்று மாலையே வேலையைத் தொடரவும் செய்தேன். கடுமையான வேலை இருக்கும் போதெல்லாம் எழுத்தாளர் பா.ராகவனின் “கடுமையான வேலையைப் போன்ற வேறு தியானம் இல்லை” (நினைவிலிருந்து) என்ற வரி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ஞாபகம் வரமால் இருக்க ஒரு வழி செய்யணும். ஆண்டு இறுதியில் நாங்களும் இந்த ஆண்டின் உருவாக்கமான Staycation இல் இருந்து விட்டு வந்தோம். குழந்தைகளை ஏறக...

பறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு - லாரி பேக்கரின் கனவு

கிண்டில் அன்லிமிடெட் இல் இருக்கும் நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது இந்த நூல் கண்ணில் பட்டது. ஜெயமோகன் தளத்தில் இவரின் அறிமுகம் படித்தது நினைவில் வந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் சில வீடுகளை பேக்கர் பாணியில் கட்டும் செய்திகளையும் படித்திருக்கிறேன்.  அவற்றினால் கிளர்ந்த ஆர்வத்தில் இம்மாத நூலாக பரிந்துரைத்தேன்.  புத்தகம் கௌதம் பாட்டியா லாரி பேக்கரைப் பற்றி எழுதிய நூலின் ஒரு பகுதியுடன் (முன்னுரை) தான் ஆரம்பிக்கிறது. லாரியின் மனைவி எலிசபெத் பேக்கரின் நினைவுக்குறிப்புகளே இந்த புத்தகமென்றாலும் லாரி தன் பாணி கட்டடக்கலைப் பற்றி எழுதியுள்ள விரிவான அறிமுகமும் இதில் உள்ளது.  ஓய்வு காலத்தில் தங்களுக்கு நினைவில் இருப்பதைச் சொல்கிறோம் என எலிசபெத் அறிமுகக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சிகளைக் கூட துல்லியமாக நினைவில் கொண்டு வந்துவிடுகிறார் (இருவருமே - தனது பர்மா சீன சாகசங்களை லாரியும் நினைவில் வைத்திருக்கிறார்) என்றே தோன்றியது.  மருத்துவர் ஜீவானந்தத்தின் மொழிபெயர்ப்பு ஒழுகும் நீரோட்டத்தைப் போன்ற புத்தகத்தின் உள்ளடக்கத...