Skip to main content

Posts

Showing posts from May 1, 2011

எங்கள் மகன் பிறந்த கதை!

என் மனைவியின் பிரசவக் கதையை எழுத ரொம்ப ஆசைப்பட்டேன். என் எழுத்து யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, சுகன்யாவுக்கு பிடித்திருப்பதால் கண்டிப்பாக எழுத ஆசை. 2011 ஏப்ரல் கடைசி வாரம் நிச்சயம் 2010 ஏப்ரல் போலவே நினைவில் என்றும் தங்கி இருக்கும். கடந்த ஏப்ரலில் திருமணம், திருமணத்திற்கு முந்தைய வாரம் லாஸ் வேகஸில் நடந்த OAUG Colloborate 10 இல் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பென நிறைய மகிழ்ச்சியான தருணங்கள். இந்த வருடம் APICS CSCP தேர்வு முடிவு, முதல் திருமண நாள் மற்றும் குழந்தை :) சுகன்யாவிற்கு 8 ஆம் மாதம் ஆரம்பித்தவுடன் அத்தையும் மாமாவும் சிங்கப்பூர் வந்தனர். குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு தேவையான அனைத்தையும் அண்ணா நகர் JUST BORN இல் பெட்டி நிறைய வாங்கி வந்திருந்தனர். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மார்ச் மாதத்தில் விசாவிற்கு விண்ணப்பித்திருந்தோம். ஏப்ரல் முதல் வாரத்தில் விசா கிடைத்து விட்டது. ஏப்ரல் 21 ஆம் தேதி வந்திறங்கினர். முதல் முறையாக வெளி நாட்டிற்கு வந்தாலும், சிங்கப்பூர் என்பதால் சுலபமாக வந்து சேர முடிந்திருந்தது. மறுபடியும் பெட்டி நிறைய பொருள்கள் :) திருமண நாளை ஒட்டியே பிரசவம் இருக்குமென எதி...