சமீபகாலமாக புத்தக வாசிப்பு குறைந்தே இருந்தது. திடீரென்று தோன்றியதோ என்னவோ மறுபடியும் வாசிப்பின் சுகம் கிட்டியிருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் எளிமையாக, படிக்க சுகமான அனுபவங்கள். சின்ன அண்ணாமலை அவர்களின் நட்புகள் எனக்கு ஏறக்குறைய நாடக, திரைப்பட நடிகர், எழுத்தாளர் பாரதிமணி அவர்களை ஞாபகப்படுத்தியது. ராஜாஜி மீதான அவரின் பக்தி. கல்கியுடனான அவரின் நட்பு ஆச்சரியமாகவே இருந்தது. இவர் நடந்து வருகிறாரென்று கல்கி ஒரு காரையே இவருக்கு பரிசளித்திருக்கிறார். விடுதலைப் போரட்டத்தில் கைதுசெய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைப்பட்ட இவரை மக்கள் சிறையை உடைத்து மீட்டுள்ளனர். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரமானது. ஆனால் சாதாரணமாக சொல்லி செல்கிறார். இளமையில் மலேசியா பினாங்கில் இருந்து ஆங்கிலேயர்களால் இந்தியாவிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். மபொசியினுடனான நட்பை மிகவும் பெருமையான ஒன்றாக எண்ணியிருந்திருக்கிறார். தமிழ்பண்ணை பதிப்பகம் ஆரம்பித்து நல்ல நூல்களை பதிப்பித்திருக்கிறார். மிக முக்கியமாக திமுகவை எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கவும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் மன்றம் ஆர...