படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் உவகை தரும் செயல். நாம் படித்த பள்ளிகளின் மேல் எப்போதுமே நன்மதிப்பு (அல்லது இப்போது இருப்பது சரியில்லை என்பதால் ஏற்படும் ரொமாண்டிசிச எண்ணம்) இருக்கும். கடந்து வந்த பாதைகளுக்கு சரியான தொடக்கம் நம் பள்ளிகள்தான். ரயில் பெட்டிகளே வகுப்பறையாக இருந்த ஒரு பள்ளியைப் பற்றிய கதையே இந்த புத்தகம். சம்பிரதாயமான வார்த்தைகளால் இந்த புத்தகத்தைப் புகழாமல், புத்தகத்தைப் பற்றியும், எனக்கு புரிந்ததைப் பற்றியும் இங்கு எழுதி வைக்க தோன்றியது. ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகில் இருந்த டோமோயி ஹாகுன் என்ற பள்ளியைப் பற்றிய கதைதான் இந்த புத்தகம். அந்த பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சோசாகு கோபயாஷி என்பவர் இந்த பள்ளியை 1937 இல் தொடங்கினார். 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வீச்சுகளால் பள்ளி தீயில் எரிந்து அழிந்தது. வெறும் 8 ஆண்டுகளே இருந்த ஒரு பள்ளி இன்று ஜப்பானின் பாட புத்தங்களில் கூட இடம்பெற்றிருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட முதல் ஆண்டே 45 இலட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. டோட்டோ-சான் என்ற சிறுமி ஒரு பள...