Skip to main content

Posts

Showing posts from 2008

2008 - கடந்து வந்தவை (சுஜாதா, இருளர்கள், காஞ்சிவரம்)

2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் இருந்தேன். பெங்களூரைப் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத புத்தாண்டு தினம். ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் ஊரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டும் நாங்களே கோப்பையைக் கைப்பற்றினோம். ஐந்தாவது முறையாக இத்தொடரில் வென்று(?) கோப்பையைக் கைப்பற்றினோம். கேள்விக்குறிக்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த போட்டித்தொடர் நடந்துள்ளது. முதல் மூன்று முறை போட்டியை நடத்தும் அணி நேரடியாக அரையிறுதியில் விளையாடியது :) கடைசி இரண்டு முறை நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதை யாரும் கேட்பதுமில்லை. அனைவருக்குமே ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. தோற்பது ஜெயிப்பது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய அனைவருமே ஊரில் ஒரே சமயத்தில் இருக்கும் நாட்கள் என்பதால் இது ஒரு கூட்டு சந்திப்பு போலவே நடக்கிறது. 2009 ஆம் ஆண்டும் நடக்கும் :) கோப்பை யாருக்கென்று பார்ப்போம். பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி வந்தது. வாசகனாக இந்த ஆண்டின் பெரிய இழப்பென உணர்ந்த சம்பவம். 2008 இன் முதல் ஆறு மாதம் ஹைதரா...

கணேஷ் வசந்த் கதைகள் (தொடர்ச்சி)

விபரீதக் கோட்பாடு ஒரு சங்கம் செய்யும் ஒரு விபரீத செயலைக் கண்டுபிடிக்கும் கதை. தம்புசெட்டித் தெருவுக்கு ஒரு பெண்ணும் ஒரு இளைஞனும் கணேஷ் வசந்தின் அலுவலகத்திற்கு வருவார்கள். இருவரும் விரைவில் மணந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி திடிரெனக் காணாமல் போய் விடுகிறார். எனவே மனைவியைக் கண்டுபிடித்து விவாகரத்துப் பெற வேண்டும். இது அந்த இரண்டாவதாக மணந்து கொள்ளப் போகும் பெண்ணின் பிடிவாதத்தால் தான். கணேஷ் வசந்த் சரி என்று ஒருமுறை அவர்கள் வீட்டிற்கு போவார்கள். அங்கு முதல் மனைவியின் அறையில் சில ஃப்லிம் சுருள்களை கணேஷ் எடுத்து வைத்துக் கொள்வார், கூடவே ஒரு நோட்டிலிருந்து மேல் காகிதத் துண்டையும். அங்கு அந்த இளைஞனின் சித்தப்பா ஒருவரையும் சந்திக்க நேரிடும். சித்தப்பாவின் உதவியாளராகத்தான் இரண்டாவது பெண் அங்கு சேர்ந்து அந்த இளைஞனைக் காதலித்து மணமுடிக்க இருப்பார். அந்த ஃப்லிம் சுருள்கள் அந்த வீட்டில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்த்தும். கணேஷ் முதல் மனைவி ஊட்டியில் இருப்பதைக் கண்டு பிடித்துவிடுவார். ஆனால் இவர்கள் அங்கு போய் சந்திக்கும் முன் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு இர...

கணேஷ் - வசந்த் கதைகள்

சில நாட்களுக்கு முன்பு சுஜாதாவின் கணேஷ் வசந்த் நாவல்களைப் பற்றிய வலைப்பக்கத்தை பார்க்க நேர்ந்தது. நானும் சில கணேஷ் வசந்த் நாவல்களை பற்றி சில வரிகள் எழுதலாமென தோன்றியது. நான் படித்த நாவல்கள் எழுத பட்டக் காலத்தைப் பற்றியும் அவற்றின் கால வரிசைகளைப் பற்றியும் ஒன்றும் தெரியாததனால் கதைக் குறிப்புகள் மட்டும் சில வரிகள்.சுஜாதாவின் கதைகள் சொல்லப் பட்ட விதத்தாலேயே வாசகர்களுக்கு ஒரு துள்ளலான மன நிலையை அளித்தன. வசந்தின் சொல்லி முடிக்கப்படா ஜோக்குகளும், கண் மறைவில் சொல்லப் பட்டு ,கேட்ட பெண்ணின் எதிர்வினைகள் மட்டுமென வாசகனுக்கு அறிமுகமான சில ஜோக்குகள் என பிரசித்தம். வசந்த் சில கதைகளில் பாரதி கவிதைகளையும் உபயோகத்திருப்பார். அப்துல் ரகுமான், மேத்தா போன்றொரின் கவிதைகளும் அடக்கம். கன்னம் வைப்பதைத் தவிர அனைத்து வேலைகளையும் வசந்த் செய்திருப்பார். ஒரு கதையில் அவரே இதைக் குறிப்பிட்டிருப்பார். சில முறை அந்த மாதிரி வேலைகளில் தாக்கப் பட்டிருப்பார். நைலான் கயிறில் கணேஷ் , வசந்தின் இம்மாதிரி வேலையைச் செய்து போலிஸிடம் அகப்பட்டு பின்பு சமாளித்து வெளிவருவார். ஏறக்குறைய எல்லாக் கதைகளின் துப்பறிதலிலும் Mistrust the O...

சிறுதெய்வ வழிபாடும் அவற்றின் வரலாறுகளூம்

சிங்கை தேசிய நூலகத்திலிருந்து குறுஞ்சாமிகளின் கதைகள் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்கக் கொண்டுவந்தேன். கழனியூரன் தொகுத்து உயிர்மை வெளீயிட்டு இருக்கும் இந்த நூலில் தென் தமிழகத்தின் பல குறுஞ்சாமிகளின் செவிவழி வரலாற்றைத் தொகுத்துள்ளார். "காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உண்ர்ச்சிக் கொ ந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன" என்று தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தொகுத்துள்ள 23 கதைகளும் இதையே வெளிப்படுத்துகின்றன. புத்தகத்தின் முடிவில் கழனியூரன் ஒரு முக்கியமானக் கோரிக்கையை முன்வைக்கிறார். "பாரததேசம் எங்கும் நிலவும் இத்தகைய நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறுகள் தொகுக்கப் பட வேண்டும்" இதை யாரேனும் முன்னெடுத்துச் செல்வார்களா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டின் நிறைய கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்தாலும் அவற்றின் வரலாறு அறிய முடியாததாகவோ இல்லை சானறுகள் இல்லாததாகவோ இருக்கிறது. மேலும் மாரியம்மன் என்ற வழிபாட்டு சிறுதெய்வம் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இருக்கிறது. ஆனால் அவற்றின் வரலாறுகள் பெரும்பாலும் வெவ்வேறாகவே இருக்கின்...

சிங்கையில்

கடந்த ஜூன் மாதம் 7 ஆம் நாள் ஹைதராபாத்திலிருந்து சிங்கைக்கு கிளம்ப வேண்டியிருந்தது. முன் கூட்டியே முடிவு செய்யப்பட்டிருந்த பயணம் என்றாலும் ஊருக்கு போய் சில நாட்கள் தங்கியிருக்க முடியாமல் அவசர அவசரமாய் திரும்பி வந்ததாலோ என்னவோ கொஞ்சம் தடுமாற்றத்துடனே கிளம்பினேன். இரவு 11.50 மணி விமானத்திற்கு 7.30 மணிக்கே கிளம்பிவிட்டேன். 8.15 மணிக்கே RADIO CABS ன் ஓட்டுனர் 8.30 மணிக்கே என்னை ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் இறக்கி விட்டார். ஷம்ஷாபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் பெயருக்கு ஏற்றார் போல நன்றாகவே இருந்தது. ஆனால் மிக நீண்ட, சர்வதேச விமானங்கள் கிளம்பும் இடங்கள் எல்லாம் காலியாகவே இருந்தது. இதெல்லாம் பிரச்சனை இல்லை. மறுநாள் காலையில் என் பெரிய பொட்டியைத் தூக்கிக் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு தள்ளினேன்.தள்ளமுடியவில்லை. பக்கத்தில் இருந்த ஒரு வெள்ளையர் எப்படி தள்ள வேண்டுமென்று செய்தேக் காட்டினார்.அப்பாடா எங்க ஊர் மானத்தைக் காப்பாற்றி விட்டேன் என்று நினைத்துக்கொண்டேன்.பாங்காக் செல்லும்போது இதை எப்படி செய்யத் தவறினேன் என்று தெரியவில்லை.இங்கு சரியாக செய்துவிட்டேன். சிங்கைக்கு வந்து மூன்று வாரங்களுக்கு...

ஹைத‌ராபாத்தில் ஓர் ஆண்டு

இன்று காலையில் அலுவலக நண்பர்களின் வாழ்த்து செய்திகள் கொஞ்சம் புத்துணர்ச்சியை அளித்தன. இந்நிறுவனத்தில் என்னுடைய இரண்டாம் ஆண்டு தொடக்க நாள். கடந்த ஆண்டு இதே மாதம் 14 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து சார்மினார் எக்ஸ்பிரஸில் கிளம்பும் போது, கூடிய சீக்கிரம் சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே இருந்தேன்.மறுநாள் காலை 8 மணிக்கு செகந்திராபாத் நிலையத்தில் நான் இருந்த பெட்டியிலிருந்து அனைவரும் இறங்கி விட்டனர். நம்பள்ளி நிலையத்திற்கு வந்து சேரும்போது மணி 9 ஆகிவிட்டிருந்தது. அங்கே காத்திருந்த நண்பனுடன் கிளம்பி யூஸுப்குடா வில் இருக்கும் அவனது அறையில் அன்று முழுவதும் இருட்டறையில் தூங்கியவாறே கழித்தேன்.பெங்களூரை விட இங்கு சாப்பிட ஹோட்டல் கண்டுபிடிப்பது பெரிய வேலை என்று முதல் நாளே புரிந்தது.பெங்களூரில் தெருக்கு தெரு சாகர் களும் நந்தினி போன்ற ஆந்திர வகை உணவகங்களும் நிறைந்தே இருக்கும். இதில் சாகர்கள் காபியைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவை. கோரமங்களா கிருஷ்ணா கேஃப் போன்ற தெய்வ மச்சான்களும் சில இடங்களில் இருப்பார்க‌ள்.ஹைத‌ராபாத்தில் நீக்கமற நிறைந்திருப்பது பிரியாணி தோட்ட‌ங்க‌ளே. 15 ஆம் ...

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...