2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் இருந்தேன். பெங்களூரைப் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத புத்தாண்டு தினம். ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் ஊரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டும் நாங்களே கோப்பையைக் கைப்பற்றினோம். ஐந்தாவது முறையாக இத்தொடரில் வென்று(?) கோப்பையைக் கைப்பற்றினோம். கேள்விக்குறிக்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த போட்டித்தொடர் நடந்துள்ளது. முதல் மூன்று முறை போட்டியை நடத்தும் அணி நேரடியாக அரையிறுதியில் விளையாடியது :) கடைசி இரண்டு முறை நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதை யாரும் கேட்பதுமில்லை. அனைவருக்குமே ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. தோற்பது ஜெயிப்பது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய அனைவருமே ஊரில் ஒரே சமயத்தில் இருக்கும் நாட்கள் என்பதால் இது ஒரு கூட்டு சந்திப்பு போலவே நடக்கிறது. 2009 ஆம் ஆண்டும் நடக்கும் :) கோப்பை யாருக்கென்று பார்ப்போம். பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி வந்தது. வாசகனாக இந்த ஆண்டின் பெரிய இழப்பென உணர்ந்த சம்பவம். 2008 இன் முதல் ஆறு மாதம் ஹைதரா...