கல்லூரி காலங்களில் தேர்வுகளுக்கு அறை நண்பன் அப்துல் எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதுண்டு. சில நேரங்களில் அவன் சொல்லித் தருவதற்கு பதில் வரிக்கு வரி படிக்க ஆரம்பித்து விடுவான்.அந்த சமயங்களில் முத்து அவனை கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் பொறியியல் பாடங்களில் அப்படி எதிர்பார்ப்பது நியாயமில்லை தான். ஆனால் எனக்கு சில சமயங்களில் கதை சொல்வதென்பதெ வரிக்கு வரி படித்துக் காட்டுவதாகி விளக்கெண்ணெய் வழிய ஆரம்பித்துவிடுகிறது. சில நாட்களாக ரேவதி சங்கரனின் குரலில் துப்பறியும் சாம்பு ஒலிப்புத்தகம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் கதைகளை வரிக்கு வரி படித்துத் தான் காட்டவேண்டும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் குரலிலேயே மோனோ ஆக்டிங் நடத்துகிறார். தேவனின் ஹாஸ்யங்களை அநாயாசமாய் தன் குரலில் கொண்டு வருகிறார். சாம்பு, வேம்பு, சுந்து பயல் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலன் குரல்களைக் கேட்டுக் கொண்டே தினமும் தூங்கிப் போகிறோம். சிறு வயதில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் பார்த்த சாம்பு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி தவிர்த்து வேறு யாரும் நினைவில் இல்லை. அந்த ஒட்ட வைத்த மூக்கும் தலைக்கு நடுவில் ஒட்டியிருக்கும் வழுக்கைய...