Skip to main content

Posts

Showing posts with the label வாசிப்பு

திருநெல்வேலி சரித்திரம் - இராபர்ட் கால்டுவெல்

வரலாற்றுப் புத்தகங்கள் தரும் வாசிப்பின்பம் அதிகம்தான். ஏறக்குறைய கால யந்திரத்தில் பயணிப்பதைப் போலத்தான். திருநெல்வேலியைப் பற்றி சங்க காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டம் வரை ஏறக்குறையத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான காலகட்டத்தில் தமிழருக்கும் இந்தியருக்கும் இம்மாதிரியான வரலாற்று நூல் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும். தமிழ்நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் ஓரளவிற்கு தென்னிந்தியா பற்றியும் நிறைய தகவல்களை சேகரித்து எழுதியுள்ளார். அவருக்கு பிற நூல்களும் கடிதங்களும் தான் முக்கியமான ஆதாரமாக இருந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சில தகவல்கள் பிற்கால ஆய்வுகளால் மாறியிருக்கின்றன. ந.சஞ்சீவி படிக்க சுவாரசியமாகவே இதைத் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அநேக இடங்களில் அடைப்புக்குறிக்குள் அவரின் கருத்தை எழுதியிருப்பது சற்று ஆயாசமாக இருக்கிறது.  பாளையக்காரர்களின் போர்களைப்பற்றிய இடங்களில் ஏறக்குறைய விளையாட்டு வர்ணனை அளவுக்கு இந்த அடைப்புக்குறி கருத்துகள் இருக்கின்றன.  அதுவும் அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த கருத்துகள் இருக்கின்றன. அவரின் மொழிபெய...

2008 - கடந்து வந்தவை (சுஜாதா, இருளர்கள், காஞ்சிவரம்)

2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் இருந்தேன். பெங்களூரைப் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத புத்தாண்டு தினம். ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் ஊரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டும் நாங்களே கோப்பையைக் கைப்பற்றினோம். ஐந்தாவது முறையாக இத்தொடரில் வென்று(?) கோப்பையைக் கைப்பற்றினோம். கேள்விக்குறிக்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த போட்டித்தொடர் நடந்துள்ளது. முதல் மூன்று முறை போட்டியை நடத்தும் அணி நேரடியாக அரையிறுதியில் விளையாடியது :) கடைசி இரண்டு முறை நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதை யாரும் கேட்பதுமில்லை. அனைவருக்குமே ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. தோற்பது ஜெயிப்பது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய அனைவருமே ஊரில் ஒரே சமயத்தில் இருக்கும் நாட்கள் என்பதால் இது ஒரு கூட்டு சந்திப்பு போலவே நடக்கிறது. 2009 ஆம் ஆண்டும் நடக்கும் :) கோப்பை யாருக்கென்று பார்ப்போம். பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி வந்தது. வாசகனாக இந்த ஆண்டின் பெரிய இழப்பென உணர்ந்த சம்பவம். 2008 இன் முதல் ஆறு மாதம் ஹைதரா...