Skip to main content

Posts

Showing posts with the label எஸ்.வி.ஆர்

அஞ்சலி - எஸ்.வி.ராமகிருஷ்ணன்

ஹைதராபாத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு எஸ்.வி.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்தேன். கவிஞர்.வா.மணிகண்டன் தான் என்னை எஸ்.வி.ஆருக்கு அறிமுகப்படுத்தினார். எனது அலுவலகம் எஸ்.வி.ஆரின் வீட்டுக்கு அருகில் இருந்ததால் மாலை நேரங்களில் அவரது வீட்டுக்கு செல்வது வழக்கம். ஹைதராபாத் திரைப்பட சங்கத்தின் திரைப்படங்களை அமீர்பேட் சாரதா ஸ்டுடியோஸிலும் சில சமயம் எல்.வி.பிரசாத் ப்ரிவ்யூ திரையரங்கிலும் காண முடியும். வார நாள்களில் திரைப்படம் என்றால் எஸ்.வி.ஆர் -உடன் செல்வது வழக்கம். மற்ற நாள்களின் மாலை நேரங்களில் பஞ்சாரா ஹில்ஸ் தாவரவியல் பூங்காவி்ல் ஒரு மணி நேரம் போல அவருடன் பேசிக்கொண்டே நடப்பது தான் வேலை. விடாமல் பேசிக் கொண்டே இருப்பார். சமகால வரலாறில் பெரிதும் ஈடுபாடு உடையவர். ரொம்ப சாதரணமாக பல முக்கிய வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியைப் பற்றிப் பேசுவார். எழுத்தாளர் அசோகமித்திரன், இ.பா, திலிப்குமார், க்ரியா ராமகிருஷ்ணன், திருப்பூர் கிருஷ்ணன், தி.க.சி போன்ற பலரைப் பற்றி அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 2008 புத்தகக் கண்காட்சியின் போது திலிப்குமாரையும், க்ரியா ராமகிருஷ்ணனையும் சந்தித்து அறிமுகப்படுத்திக் கொண்டேன். க்...