Skip to main content

Posts

Showing posts with the label புத்தகம்

திருநெல்வேலி சரித்திரம் - இராபர்ட் கால்டுவெல்

வரலாற்றுப் புத்தகங்கள் தரும் வாசிப்பின்பம் அதிகம்தான். ஏறக்குறைய கால யந்திரத்தில் பயணிப்பதைப் போலத்தான். திருநெல்வேலியைப் பற்றி சங்க காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டம் வரை ஏறக்குறையத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான காலகட்டத்தில் தமிழருக்கும் இந்தியருக்கும் இம்மாதிரியான வரலாற்று நூல் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும். தமிழ்நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் ஓரளவிற்கு தென்னிந்தியா பற்றியும் நிறைய தகவல்களை சேகரித்து எழுதியுள்ளார். அவருக்கு பிற நூல்களும் கடிதங்களும் தான் முக்கியமான ஆதாரமாக இருந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சில தகவல்கள் பிற்கால ஆய்வுகளால் மாறியிருக்கின்றன. ந.சஞ்சீவி படிக்க சுவாரசியமாகவே இதைத் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அநேக இடங்களில் அடைப்புக்குறிக்குள் அவரின் கருத்தை எழுதியிருப்பது சற்று ஆயாசமாக இருக்கிறது.  பாளையக்காரர்களின் போர்களைப்பற்றிய இடங்களில் ஏறக்குறைய விளையாட்டு வர்ணனை அளவுக்கு இந்த அடைப்புக்குறி கருத்துகள் இருக்கின்றன.  அதுவும் அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த கருத்துகள் இருக்கின்றன. அவரின் மொழிபெய...

என்னுடைய முதல் புத்தகக் கண்காட்சி

எல்லோரும் அவங்களுடைய புத்தகக் கண்காட்சியைப் பத்தி எழுதிட்டாங்க.நாமும் கொஞ்சம் எழுதுவோமே.12.45 PM க்கு என்னோட முதல் புத்தகக் கண்காட்சிக்கு நுழையறேன்.முதலில் விகடனுக்கு தான் போனேன்.தேசாந்திரி மற்றும் வெற்றிக்கு ஏழு படிகள் இரண்டையும் எடுத்தாச்சு.அடுத்தது கிழக்கு தான்.உள்ள நுழையும் போதே பாலபாரதியைப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் கழித்து நானே போய் அவர்ட்ட நானே அறிமுகம் பண்ணிகிட்டேன்(வேற என்னத்த பண்றது...)அங்க இருந்து மு.க வையும் குருதிப்புனலையும் அள்ளிக்கிட்டேன்.பாவம் சில்லரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க கிழக்கில.அடுத்த முறை பத்ரி அதை சரி செய்துடுவார்னு(??) நினைக்கிறேன். பிறகு காலச்சுவடு,உயிர்மை,மணிமேகலை,நர்மதா,வானதி,கண்ணதாசன், குமுதம்.. நிறைய கடைக்குப் போய் கொஞ்சம் தான் வாங்கினேன்.எங்கம்மா 500 ரூ மேல வாங்காதடான்னு சொல்லி விட்டு இருந்தங்க.பார்த்தா 1200 ரூ மேல பில் இருக்கு ஆனா புத்தகங்கள் ரொம்பக் குறைவா இருக்க மாதிரி தான் இருந்தது.மணியும் 2.30 ஆயிடுச்சி.அங்க என்னடானனா சுத்தி சுத்தி விடறாங்க.2.45 க்கு வெளியே வ்ந்தாச்சு.சரி வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுப்போம்னு உள்ள் நுழைஞ்சி ஒரு தயிர் சாதம் வாங்கினா அது...