சிங்கை தேசிய நூலகத்திலிருந்து குறுஞ்சாமிகளின் கதைகள் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்கக் கொண்டுவந்தேன். கழனியூரன் தொகுத்து உயிர்மை வெளீயிட்டு இருக்கும் இந்த நூலில் தென் தமிழகத்தின் பல குறுஞ்சாமிகளின் செவிவழி வரலாற்றைத் தொகுத்துள்ளார். "காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உண்ர்ச்சிக் கொ ந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன" என்று தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தொகுத்துள்ள 23 கதைகளும் இதையே வெளிப்படுத்துகின்றன. புத்தகத்தின் முடிவில் கழனியூரன் ஒரு முக்கியமானக் கோரிக்கையை முன்வைக்கிறார். "பாரததேசம் எங்கும் நிலவும் இத்தகைய நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறுகள் தொகுக்கப் பட வேண்டும்" இதை யாரேனும் முன்னெடுத்துச் செல்வார்களா என்று தெரியவில்லை. தமிழ் நாட்டின் நிறைய கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்தாலும் அவற்றின் வரலாறு அறிய முடியாததாகவோ இல்லை சானறுகள் இல்லாததாகவோ இருக்கிறது. மேலும் மாரியம்மன் என்ற வழிபாட்டு சிறுதெய்வம் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இருக்கிறது. ஆனால் அவற்றின் வரலாறுகள் பெரும்பாலும் வெவ்வேறாகவே இருக்கின்...