Skip to main content

Posts

Showing posts from September 20, 2009

லாலேட்டனும் ஆழ்வார்பேட்டை ஆண்டவரும்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு. தொய்வில்லாமல் ஒரு நல்ல திரைக்கதை. எழுத்தாளர்கள் திரையில் பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டனர். சுஜாதாவின் தாக்கமும் தெரிகிறது! தியேட்டர்களில் அடிக்கடி கைத்தட்டல்களும் சிரிப்புகளும். லட்சுமியும் லாலேட்டனும் பேசும் வசனங்களும் அவர்களின் உடல்மொழியும் கச்சிதமாக படமாக்கப்பட்டிருக்கிறது. மோகன்லாலின் screen presence மிக நன்றாக இருக்கிறது. கமல் கொஞ்சம் subdued ஆக நடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். இருவரும் இறுதியில் சந்திக்கும் காட்சியில் மோகன்லாலே முன்னால் தெரிகிறார். ஒரு சாமானியனின் உடல்மொழிக்கு கமலஹாசனின் உடல்வாகும், நடையும் பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது. நல்லவேளை திரைப்படத்தில் பாடல்கள் இல்லை. படமும் 2 மணி நேரங்களில் முடிந்துவிட்டது. அல்லா ஜானே மட்டும் திரையில் பின்னணியில் கேட்க கிடைத்தது. மனுஷ்யபுத்திரனுடன் பேசியபோது தான் அந்த ஒரு பாடலை மட்டுமே எழுதியதாகவும் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல் கமலே எழுதியது என்றும் கூறினார். அவர் கவிதைகளைப் போலவே அல்லா ஜானே பாடலும் ஒரு நம்பிக்கை இழந்த ஜீவனின் குர...