Skip to main content

Posts

Mauve - How One Man Invented a Color That Changed the World

நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் வெங்கடாசலம். நான் Popular science எனும் வகைமையைச் சார்ந்த Mauve எனும் புத்தகத்தை அண்மையில் படித்தேன். புத்தகத்தைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதன்மையாக இது ஒரு வாழக்கை வரலாற்று நூல். William Perkin எனும் வேதியியல் விஞ்ஞானியின் வாழ்க்கை, அவரின் கண்டுபிடிப்பு மற்றும் அதனால் தொழிற்துறையிலும் அறிவியல் துறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் தான் புத்தகத்தின் சாரம். முதலில் William Perkin பற்றியும் அவர் எவ்வாறு இந்த கண்டுபிடிப்பை நோக்கிச் சென்றார் என்றும் பார்ப்போம். William Perkin 1838 இல் பிறந்தார். அவர் தந்தை தச்சுத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெர்கினுக்கு இளைய வயதில் நிறைய விஷயங்களில் ஆர்வம் இருந்தது. வேதியியல் ஆர்வம் பின்னாட்களில் தான் வந்தது. ஆனால், அவரின் தாத்தா ரசவாதி என பெயர் பெற்றிருந்தார். இப்போது அக்காலத்தில் இருந்த அறிவியல் தேவைகளையும் பிற முன்னேற்பாடுகளைப் பற்றியும் சில வார்த்தைகள். 19ஆம் நூற்றண்டில் வெப்பமண்டல காலனிய நாடுகளில் இருந்த ஆங்கில சிப்பாய்கள் நிறைய பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ...

ஊதா கலரு டை…

I will have to start with a quote. ‘I was then eighteen. While working on an experiment, I failed, and was about to throw a certain black residue away when I thought it might be interesting. The solution of it resulted in a strangely beautiful colour. You know the rest.’ An 18-year-old boy, with none of the modern-day gauging equipment, discovered a colour that changed the world of chemistry from theoretical, experimental studies to a world industry. The prospect of wealth through chemistry gave birth not only to the artificial colours but changed the world of modern medicines, perfumes, explosives, Canned food preservatives, photography and many more. Outside the home where he born, the following is written in a plaque “Sir William Henry Perkin, FRS, discovered the first aniline dyestuff, March 1856, while working in his home laboratory on this site, and went on to found science-based industry.” I emphasize the important words – “went on to found science-based industry”. Wh...

My Husband and Other Animals

I read this book for the third time. I love to read books about wildlife and ecology. I read Theodore Baskaran, AJT John Singh, Davidar and Ullas Karanth. The difference here is the complete change in the kind of wildlife we read. Just like the great Romulus Whitaker, his wife Janaki Lenin also loves the amphibians and the reptiles. We hardly see people writing about frogs, shrews, Porcupines, crocs and lots and lots of snakes. What started as the Madras Crocodile Park’s newsletter changed to a newspaper article and took the avatar as one of the best books in India for lesser-known wildlife. I loved Romulus Whitaker’s இந்திய பாம்புகள். It is more of a field guide, and I refer at times. The pleasure of the text is such an important thing these days to get hooked into the book. This book is way up there as a page-turner. However, we encounter so many snakes and crocodiles that I often have to stop reading and browse to find the images and videos (e.g. Taipan, Mambas, moccasin, red snak...

நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் - ஜெயமோகன்

2007 அல்லது 2008 ஆம் ஆண்டு வாக்கில் இந்த புத்தகம் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த சமயத்தில் படிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ஓரளவிற்கு படிக்க ஆரம்பித்திருந்ததால் இந்நூலை படிப்பது சிரமமாக இருக்கவே வைத்து விட்டேன். இப்போது முழுதாக படிக்க முடிந்தது. கோட்பாடு சார்ந்த பகுதிளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் படிப்பதற்கு இனிமையாகவே இருந்தது. ஜெயமோகனின் கட்டுரைகளின் பிரதியின்பம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த நூலின் சில கட்டுரைகளைத் தனியாக படித்திருக்கிறேன். நூலில் நான்கு பெரும் பிரிவுகளில் முதல் மூன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அறிமுகம் மற்றும் அடிப்படைகள் பகுதிகளை இரண்டு முறைக்கு மேல் வாசித்தேன். இனிமேலும் அடிக்கடி வாசிப்பேன் என்றே நினைக்கிறேன். இதுவரை தமிழ் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிகள் மற்றும் போக்குகளை புரிந்துகொள்ள வரலாறு பகுதி உதவியது. நூலில் 800க்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்துள்ளேன். இந்த நூல் ஏறக்குறைய ஒரு பாடபுத்தகம் மாதிரி தான். வாசகனாக இந்த நூலை பாட நூலாக அணுகினாலும் இந்த நூலின் தெளிவான விளக்கங்களும் பிரதியின்பமும் முக்கியமானவை. பாடப்புத்தகங்களில் எளிதில் கிடைக்காத பண்ப...

2019 ஆம் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்

இந்த ஆண்டு முழுக்க பயணம் இருந்து கொண்டே இருந்தது. ஆண்டின் பெரும்பகுதி பாங்காக் நகரத்தில் கழிந்தது. ஒரு முறை ஜகார்த்தாவிற்கு செல்ல வேண்டியிருந்தது. நண்பர்களுடன் தமிழ்நாட்டின் அருவிகளுக்கு (முக்கியமாக மேற்கு மலைத்தொடர்ச்சியோரம்) ஒரு சாலை வழிப் பயணம் சென்றேன். சென்னையில் கிளம்பி திற்பரப்பு, காளிகேசம், களக்காடு தலையணை அருவி, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு, குற்றாலம், குண்டாறு அருவி, கும்பவுருட்டி, சின்னச்சுருளி மற்றும் கும்பக்கரை சென்று திரும்பினோம். கன்னியாகுமரி முழுக்க ஜெயமோகன் கதைகளில் இறங்கி திரிவது போல இருந்தது. ஆரல்வாய்மொழி கணவாய், திற்பரப்பு அருவியின் இரவு, ஆற்றங்கரையோர இசக்கி (யக்‌ஷி), ரப்பர் மரங்கள், மகாதேவர் ஆலயம், திருவட்டாறில் நாகப்பிரதிஷ்டை செய்த அரசமரம், கதகளி அரங்கம், கீரிப்பாறை, பழம்பொறி, ரசவடை என. நாங்கள் ஜூலை முதல் வாரத்தில் பயணித்தோம். திருநெல்வேலிக்கு வடக்கே ஒரு அருவியிலும் நீரில்லை. திற்பரப்பிலும், காளிகேசத்திலும், களக்காடு தலையணையிலும் ஊறிப்போய் வந்தோம். இந்த ஆண்டு விஷ்ணுபுர வாசக வட்டத்தின் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்டேன். மூன்று நாட்களும் உற்சாகமாக இருந்தது. ...

பாம்பின் கண் - தியடோர் பாஸ்கரன்

தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய The Eye Of The Serpent என்ற நூலை திரு.லதானந்த் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நான் தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம் என்ற நூலை முன்பே வாசித்திருக்கிறேன். இந்த நூல்தான் முதலில் எழுதப்பட்டது என்றாலும், ஏற்கனவே எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் உள்ள தகவல்கள் நிறைய இதிலும் உள்ளதால் படிப்பதிலுள்ள ஆர்வம் சற்று மட்டுப்பட்டது. தியடோர் பாஸ்கரனின் அழகிய சரளமான பத்தி மொழி எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது. கானுயிர் சார்ந்த தமிழ் எழுத்தில் முன்னோடியான அவரின் கானுயிர் நூல்கள் மகத்தானவை. தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் அளவுக்கு மௌன படங்களையும் ஆரம்ப கால பேசும் படங்களையும் ஆராய்ந்தவர்கள் இல்லையென்றே நினைக்கிறேன். ராண்டார் கை சில நூல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்தாலும், ராண்டார் கை சென்னையை மையமாகக் கொண்டே நிறைய எழுதியுள்ளார். தியடோர் பாஸ்கரனின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று திரைப்படம் மதச்சார்பற்ற கலை வடிவம் என்பது. இந்தியாவின் பாரம்பரிய கலைகள் கோயில் பண்பாட்டை ஒட்டியே இருந்ததால் அவை கலைகள் ஆயினும் மதத்தோடு கொண்ட தொடர்பு தவிர்க்க முடியாததாயிற...

நினைவு அலைகள் - டாக்டர் தி சே செள ராஜன்

நவீன தமிழிலக்கியத்தின் முதல் விமர்சகராகக் கருதப்படும் க நா சு வின் பரிந்துரைகள் இன்னமும் முக்கியமானவையாகவே கருதப்படுகின்றன. அவர் இந்த நூலைப் பற்றி உயர்வாகவே எழுதியுள்ளது இந்த புத்தகத்தைப் பரிந்துரைக்க ஒரு காரணம். நான் ராஜனின் தமிழ் நாட்டில் காந்தி படித்திருக்கிறேன். அவரின் எளிய நடை அப்போதே பிடித்திருந்தது. இந்த நூலின் நடையைப் பற்றியும் சொல்ல வேண்டும். இந்திய சுதந்தரப் போரட்ட வரலாற்றின் பெரும் மனிதர்கள் இவரின் எளிமையான மொழி நடையில் இயல்பாக வந்து போகின்றனர். அலங்காரங்களற்ற மின்னும் எளிமையின் அழகு படிக்க இனிமையானது. தொழில் முறையில் மருத்துவரான இவருக்கு எளிய தமிழ் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அவரது வைணவ பின்புலம் நிச்சயம் உதவியிருக்கிறது. இளமையில் ஏழ்மையில் தான் இருந்துள்ளார். ஆனால் ஏழ்மை ஒரு சாதாரணமான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. உறுதியோடு மருத்துவம் பயின்று பர்மா சென்றிருக்கிறார். தன் வரலாற்று நூலைப்பற்றி எழுத நேரும் போது புத்தகத்தின் தகவல்களை எழுத நேர்ந்து விடுகிறது. நாம் அறிந்த காலகட்டத்தில் நமக்கு தெரிந்த வரலாற்று தகவல்களின் இடைவெளிகளில் ஒளி பாய்ச்சியிருக்கிறார் ராஜன். வெறும் த...