Skip to main content

Posts

The Idol Thief - புத்தகமும் சில நினைவுகளும்

காஞ்சிபுரம் அருகே உள்ள எங்கள் கிராமத்தின் ஓர் எல்லையில் கைலாசநாதர் கோயிலும் இன்னோர் எல்லையில் சஞ்சீவிராயர் கோயிலும் உள்ளன. சஞ்சீவிராயர் ஆலயத்தை விஜயநகர ஆட்சிகாலத்தில், 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், லட்சுமி குமார தாத தேசிகர் எடுப்பித்தார். தாதசமுத்திரம் எனும் 130 ஏக்கர் அழகான ஏரியையும் வெட்டி(கட்டி)யுள்ளார். கைலாசநாதர் கோயிலைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகளேதும் இல்லை. இக்கோயில்களின் மூலவர்கள் மட்டுமே கோயிலினுள்ளே உள்ளனர். உற்சவமூர்த்திகள் ஊரின் நடுவே உள்ள அளவில் சிறிய சுப்ரமணியர் ஆலயத்திலும் செல்வ விநாயாகர் ஆலயத்திலும் உள்ளன. முதன் முதலாக இதன் காரணம் தெரிந்த போது அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது. 1960களில் சஞ்சீவிராயர் கோயிலின் உற்சவர் சஞ்சீவிராயரைத் திருடிச்சென்றுவிட்டனர். திருச்சியில் ஏதோ துணிக்கடையில் சேலைத் தொடர்பான உரையாடலில் சீலை என்ற சொல்லால் நிகழ்ந்த குழப்பத்தில் துணி வாங்க வந்தவர்கள் சிலைத் திருட்டைப் பற்றி உளறிவிட்டிருக்கின்றனர் (எங்கள் சஞ்சீவிராயர் அப்படி உளறவைத்தார் என்பது நம்பிக்கை). அன்றிரவு பிற உற்சவ மூர்த்திகளுடன் வெளிநாடு கடத்தப்பட இருந்த சிலைகள் மீட்கப்பட்டு...

டிடிகே குழுமம்

1920 களில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் வழக்குரைஞராவது பெரிய குறிக்கோள். திருவல்லிக்கேணியின் ஆறுபேர்கள் என்ற குழு 1878இல் ஹிந்து ஆங்கில இதழைத் தொடங்கியது. அந்த ஆறு பேரில் ஒருத்தர் டிடி ரங்காச்சாரி எனும் வழக்குரைஞர். சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞர் மட்டுமில்லாமல் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ஆனார். அவரின் மகன் டிடி கிருஷ்ணமாச்சாரி 1928இல் டிடிகே குழுமத்தை நிறுவினார். சென்னையில் பெரும் ஆச்சரியத்தை அளித்த முடிவு அது. தந்தையைப் போல நீதித்துறையில் நுழைவார் என்ற எதிர்பார்ப்புகளை மீறி வணிகத்தில் இறங்கினார். இன்று Unilever என்றழைக்கப்படும் நிறுவனம் (இடையில் Hindustan Lever என்றும் அழைக்கப்பட்டது)அந்நாளில் Lever Brothers என்றழைக்கப்பட்டது. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தராக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. 1930 களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வணிகத்தை தன் பதின்ம வயது மகனான டிடி நரசிம்மனிடம் ஒப்படைத்தார். பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சாராக பொறுப்பேற்று லைசன்ஸ் ராஜ் என்று கிண்டலிக்க...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...

காலாற ஒரு நடை அல்லது வாஷிங்டனில் வெங்கடாசலம் (2)

மீண்டும் வாஷிங்டன் போகும் திட்டமிருக்கிறதா, உடன் வர முடியுமா என அலுவலக நண்பர் கேட்டவுடன் சரியென்று சொல்லி விட்டேன். சென்ற முறை நேரம் ஆகிவிடும் என்ற காரணத்தால் ஃபோர்ட் அரங்கத்திற்கும் ஜார்ஜ் டவுனுக்கும் செல்லவில்லை. ஃபோர்ட் நாடக அரங்கம் எங்கிருக்கிறது என சரியாக பார்க்காமல் விட்டிருந்தேன். மால் பகுதியில் தான் இருக்கிறது என பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஜார்ஜ் டவுனுக்கு மட்டும் தனியே பேருந்தில் செல்ல வேண்டும். ஃபோர்ட் தியேட்டரில் என்ன? இன்றும் அது நாடக அரங்காக இயங்கிக் கொண்டிருக்கிறது. 1865, ஏப்ரல் 14 ஆம் நாள் இரவு வெறும் நாடகம் மட்டும் நிகழவில்லை. அமெரிக்காவின் அடிமையொழிப்பை எதிர்த்து அணிதிரண்ட கான்ஃபெடரேட்ஸ் என்று அறியப்படும் தெற்கு மாநிலங்களின் ராணுவத்துடன் 5 ஆண்டுகளுக்கும் மேல் நடந்த உள்நாட்டு யுத்தம் 1865, ஏப்ரல் 9 ஆம் தேதி முடிவடைந்தது. அமெரிக்க அரசின் படையினரிடம் தெற்கு படையினர் சரணடைந்தனர். மனைவியின் வற்புறுத்தலின் பேரில் ஃபோர்ட் அரங்கிற்கு அன்று நாடகம் பார்க்க வந்தார் அமெரிக்கவின் 16 வது அதிபர் ஆபிரஹாம் லிங்கன். போர் முடிந்து 5 நாட்களே ஆகியிருந்தன. அதிபருக்கென்று இருந்த ஒரு தனி...

காலாற ஒரு நடை அல்லது வாஷிங்டனில் வெங்கடாசலம் (1)

சில சமயம் தற்செயலாக நமக்கு பிடித்த இடத்திற்கு போகும் வாய்ப்பு கிடைப்பது ஆச்சர்யம் தான். கடந்த ஜூலை மாதம் லாஸ் ஏஞ்சலஸ் அருகில் உள்ள ஆண்டாரியோ எனும் ஊருக்கு செல்ல நேர்ந்தது. ஏறக்குறைய இரண்டு மாதங்கள் பணி நிமித்தமாக அங்கு தங்கியிருந்தேன். அவ்வளவு நாள் இருந்ததால், சான் டியாகோ நகருக்கு சென்றிருந்தேன். நண்பன் ராஜாகுமார் சான் டியாகோவிலிருந்து ஆண்டாரியோ வந்து அழைத்துச் சென்றான். வேறு சில வாரயிறுதி நாட்களில் வெனீஸ் மற்றும் சாண்டா மோனிகா கடற்கரைக்கும் சென்றிருந்தேன். அதெல்லாம் பெரிய விஷயமாகவே இப்போது தெரியவில்லை. அக்டோபர் மாதம் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் உள்ள கொலம்பியா எனும் நகரத்துக்கு சென்றிருந்தேன். நண்பர் ஒருவர் கொலம்பியா என்றவுடன், நீ எப்படி தென்னமெரிக்கா சென்றாய் என்று கேட்டுவிட்டார். எனக்கு தேவையில்லாமல் பாப்லோ எஸ்கோபர் பெயரெல்லம் ஞாபகத்துக்கு வர ஆரம்பித்து விட்டது. அதனால் தான் இங்கு மாநிலத்தின் பெயரையும் குறிப்பிட்டேன். வாஷிங்டன் அருகில் இருப்பதால், ஒரு சனிக்கிழமை காலையில் பையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி விட்டேன். Greenbelt Metro ரயில் நிலையம் வரை காரில் சென்று அங்கிருந்து ரயில...

துப்பறியும் சாம்பு - தேவன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் ரேவதி சங்கரன்

கல்லூரி காலங்களில் தேர்வுகளுக்கு அறை நண்பன் அப்துல் எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதுண்டு. சில நேரங்களில் அவன் சொல்லித் தருவதற்கு பதில் வரிக்கு வரி படிக்க ஆரம்பித்து விடுவான்.அந்த சமயங்களில் முத்து அவனை கிண்டல் செய்வதுண்டு. ஆனாலும் பொறியியல் பாடங்களில் அப்படி எதிர்பார்ப்பது நியாயமில்லை தான். ஆனால் எனக்கு சில சமயங்களில் கதை சொல்வதென்பதெ வரிக்கு வரி படித்துக் காட்டுவதாகி விளக்கெண்ணெய் வழிய ஆரம்பித்துவிடுகிறது. சில நாட்களாக ரேவதி சங்கரனின் குரலில் துப்பறியும் சாம்பு ஒலிப்புத்தகம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். அவர் கதைகளை வரிக்கு வரி படித்துத் தான் காட்டவேண்டும். ஆனால் ஒவ்வொரு கதையிலும் குரலிலேயே மோனோ ஆக்டிங் நடத்துகிறார். தேவனின் ஹாஸ்யங்களை அநாயாசமாய் தன் குரலில் கொண்டு வருகிறார். சாம்பு, வேம்பு, சுந்து பயல் மற்றும் இன்ஸ்பெக்டர் கோபாலன் குரல்களைக் கேட்டுக் கொண்டே தினமும் தூங்கிப் போகிறோம். சிறு வயதில் ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பில் பார்த்த சாம்பு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் ஒய்.ஜி தவிர்த்து வேறு யாரும் நினைவில் இல்லை. அந்த ஒட்ட வைத்த மூக்கும் தலைக்கு நடுவில் ஒட்டியிருக்கும் வழுக்கைய...

டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி

படித்த பள்ளிக்கூடங்களைப் பற்றி பேசுவதும் எழுதுவதும் உவகை தரும் செயல். நாம் படித்த பள்ளிகளின் மேல் எப்போதுமே நன்மதிப்பு (அல்லது இப்போது இருப்பது சரியில்லை என்பதால் ஏற்படும் ரொமாண்டிசிச எண்ணம்) இருக்கும். கடந்து வந்த பாதைகளுக்கு சரியான தொடக்கம் நம் பள்ளிகள்தான். ரயில் பெட்டிகளே வகுப்பறையாக இருந்த ஒரு பள்ளியைப் பற்றிய கதையே இந்த புத்தகம். சம்பிரதாயமான வார்த்தைகளால் இந்த புத்தகத்தைப் புகழாமல், புத்தகத்தைப் பற்றியும், எனக்கு புரிந்ததைப் பற்றியும் இங்கு எழுதி வைக்க தோன்றியது. ஜப்பானின் டோக்கியோவுக்கு அருகில் இருந்த டோமோயி ஹாகுன் என்ற பள்ளியைப் பற்றிய கதைதான் இந்த புத்தகம். அந்த பள்ளியில் படித்த டெட்சுகோ குரோயாநாகி என்ற பெண் இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். சோசாகு கோபயாஷி என்பவர் இந்த பள்ளியை 1937 இல் தொடங்கினார். 1945 இல் இரண்டாம் உலகப் போரின் போது குண்டு வீச்சுகளால் பள்ளி தீயில் எரிந்து அழிந்தது. வெறும் 8 ஆண்டுகளே இருந்த ஒரு பள்ளி இன்று ஜப்பானின் பாட புத்தங்களில் கூட இடம்பெற்றிருக்கிறது. புத்தகம் வெளியிடப்பட்ட முதல் ஆண்டே 45 இலட்சம் பிரதிகள் விற்றிருக்கிறது. டோட்டோ-சான் என்ற சிறுமி ஒரு பள...