Skip to main content

Posts

My Husband And Other Animals 2

 I liked the first part of this book and enjoyed it quite a lot. I also wrote a brief on that book (https://www.goodreads.com/topic/show/21297423-2020#comment_208381628). I felt this book fades a bit compared to the first one. There are more personal incidents about Rom, his grandma, Janaki's growing years, their life together.  Also, there are some interesting changes as she wrote more about western ghats in this one. The foremost is the Agumbe & the King Cobras. I liked the chapter on the increasing population of jungle chickens (jungle fowls). Theodore Baskaran wrote about the increasing population of Jungle fowls in Sholas. There is mention about the famous coffee Luwak (Kopi Luwak). I was in Yogyakarta (pronounced Jogjakarta) in 2015. I went to the (BBC) famous Mataram Kopi Luwak and tasted the coffee. I have been drinking coffee since I was 5 years old. I couldn't find any differences, be it good or bad. Though the thought makes you squirm a bit, the coffee was nice ...

அழகர் கோயில் மற்றும் அறியப்படாத தமிழகம்

  நாட்டாரியல் ஆய்வாளர் தொ.பரமசிவனின் அறியப்படாத தமிழகம் புத்தகத்தின் சில பகுதிகளை முன்பே படித்திருக்கிறேன். பண்படுதல் குழும வாசிப்புக்காக அறியப்படாத தமிழகம் மற்றும் அழகர் கோயில் புத்தகங்களை இப்போது படித்தேன். ஏற்கனவே திரு அ.கா.பெருமாளின் ஆதிகேசவப் பெருமாள் ஆலயம் நூலை முழுமையாகவும் சுசீந்திரம் தாணுமாலயன் ஆலயம் நூலின் சில பகுதிகளையும் படித்திருக்கிறேன். திரு.அ.கா.பெருமாளின் சில நாட்டாரியல் ஆய்வு நூல்களையும் படித்திருக்கிறேன். அவற்றை வாசிப்பது எப்போதும் மகிழ்ச்சியையும் பால்ய காலத்தின் நினைவுகளையும் தூண்டும். கிராமத்தின் எல்லாத்திசைகளிலும் ஏரி, ஏரிக்கொரு காவல் தெய்வமென்னும் ஊரில் பிறந்து வளர்ந்ததால் இருக்கும். இரண்டில் எனக்கு பிடித்த நூல் அழகர் கோயில் தான். சங்க காலத்திலிருந்து இன்று வரை வாழும் ஆலயத்தை மையமாகக் கொண்ட கதைகள், வரலாற்று சம்பவங்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி தொகுத்தளித்திருக்கிறார்.  காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப் பெருமாள் (தேவராஜர், அத்தி வரதர், கரி வரதர் என்ற பெயர்களுமுண்டு) சித்திரை பௌர்ணமியில் தெற்கு நோக்கி ஏறக்குறைய பத்து கிராமங்களுக்கு வந்து, எங்களூரில...

2020

2014 ஆம் ஆண்டில் கனடா மற்றும் அமெரிக்க நிறுவனப் பணிகளின் போது சில (5) மாதங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான். தொடர்ச்சியாக 11 மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை.  அனைவருக்கும் கொரானா. எனக்கிருந்தது வேறு. 2019 டிசம்பரில் தொடங்கி மூன்று முறை அறுவை சிகிச்சை அறைக்கு சென்று வந்தாகிவிட்டது. சிகிச்சைக்காக குழந்தைகளை சிங்கப்பூரில் விட்டுவிட்டு இந்தியா வந்து திரும்பினோம். திரும்பின இரண்டாம் நாளே அனைத்து விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. Close Shave. இந்தியாவில் அறுவைசிகிச்சை முடிந்து ஒரு நாள் ஓய்வெடுத்துத் திரும்பும் வகையிலென்றால் சிங்கப்பூரில் அதே சிகிச்சை காலை 10 மணிக்கு சென்று பிற்பகல் 2 மணிக்கு திரும்பும் வேகத்தில் நடந்தது. அன்று மாலையே வேலையைத் தொடரவும் செய்தேன். கடுமையான வேலை இருக்கும் போதெல்லாம் எழுத்தாளர் பா.ராகவனின் “கடுமையான வேலையைப் போன்ற வேறு தியானம் இல்லை” (நினைவிலிருந்து) என்ற வரி ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ஞாபகம் வரமால் இருக்க ஒரு வழி செய்யணும். ஆண்டு இறுதியில் நாங்களும் இந்த ஆண்டின் உருவாக்கமான Staycation இல் இருந்து விட்டு வந்தோம். குழந்தைகளை ஏறக...

பறவைக்கு கூடுண்டு - அனைவருக்கும் வீடு - லாரி பேக்கரின் கனவு

கிண்டில் அன்லிமிடெட் இல் இருக்கும் நூல்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும் போது இந்த நூல் கண்ணில் பட்டது. ஜெயமோகன் தளத்தில் இவரின் அறிமுகம் படித்தது நினைவில் வந்தது. எழுத்தாளர் பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் சில வீடுகளை பேக்கர் பாணியில் கட்டும் செய்திகளையும் படித்திருக்கிறேன்.  அவற்றினால் கிளர்ந்த ஆர்வத்தில் இம்மாத நூலாக பரிந்துரைத்தேன்.  புத்தகம் கௌதம் பாட்டியா லாரி பேக்கரைப் பற்றி எழுதிய நூலின் ஒரு பகுதியுடன் (முன்னுரை) தான் ஆரம்பிக்கிறது. லாரியின் மனைவி எலிசபெத் பேக்கரின் நினைவுக்குறிப்புகளே இந்த புத்தகமென்றாலும் லாரி தன் பாணி கட்டடக்கலைப் பற்றி எழுதியுள்ள விரிவான அறிமுகமும் இதில் உள்ளது.  ஓய்வு காலத்தில் தங்களுக்கு நினைவில் இருப்பதைச் சொல்கிறோம் என எலிசபெத் அறிமுகக் கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்ச்சிகளைக் கூட துல்லியமாக நினைவில் கொண்டு வந்துவிடுகிறார் (இருவருமே - தனது பர்மா சீன சாகசங்களை லாரியும் நினைவில் வைத்திருக்கிறார்) என்றே தோன்றியது.  மருத்துவர் ஜீவானந்தத்தின் மொழிபெயர்ப்பு ஒழுகும் நீரோட்டத்தைப் போன்ற புத்தகத்தின் உள்ளடக்கத...

அஞ்சலி - க்ரியா ராமகிருஷ்ணன்

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியை 2010 ஆம் ஆண்டு வாங்கினேன். நான் அதை குறைவாகவே உபயோகப்படுத்துகிறேன். என் மகன் ஆங்கில வழியில் நான்காம் வகுப்பு படிக்கிறான். அவன் பள்ளியில் தமிழ் மொழிப்பாடமாகவும் இல்லை. பேராசிரியர் நன்னனின் வீடியோ பாடங்களின் மூலம் என் மனைவிதான் மகனுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தார். அவனுக்கு க்ரியாவின் அகராதிதான் இப்போது பயன்படுகிறது. முதலில் சொற்களைத் தேடுவதில் சிரமப்பட்டாலும் இப்போது அவ்வளவு சிரமப்படவில்லை. அவனுக்கு பிற்காலத்திலும் நிச்சயம் பயன்படும். 2008 இல் ஹைதராபாத்தில் இருந்த நேரத்தில் எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்னை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அறிமுகப்படுத்தினார். சென்னைக்கு போகும் போது ஓரிரு முறை க்ரியா பதிப்பக விற்பனை நிலையத்துக்கும் போனதுண்டு. சிரித்த முகத்துடன் அவரே புத்தகங்களை உடன் இருந்து தேர்ந்தெடுத்து அளிப்பார். நன்றி க்ரியா ராமகிருஷ்ணன் சார். அஞ்சலிகள் 😢

திருநெல்வேலி சரித்திரம் - இராபர்ட் கால்டுவெல்

வரலாற்றுப் புத்தகங்கள் தரும் வாசிப்பின்பம் அதிகம்தான். ஏறக்குறைய கால யந்திரத்தில் பயணிப்பதைப் போலத்தான். திருநெல்வேலியைப் பற்றி சங்க காலத்திலிருந்து 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கட்டம் வரை ஏறக்குறையத் தொடர்ச்சியாக எழுதியுள்ளார். இந்த நூல் வெளியான காலகட்டத்தில் தமிழருக்கும் இந்தியருக்கும் இம்மாதிரியான வரலாற்று நூல் பெரும் ஆச்சரியத்தை அளித்திருக்கும். தமிழ்நாட்டைப் பற்றி மட்டுமல்லாமல் ஓரளவிற்கு தென்னிந்தியா பற்றியும் நிறைய தகவல்களை சேகரித்து எழுதியுள்ளார். அவருக்கு பிற நூல்களும் கடிதங்களும் தான் முக்கியமான ஆதாரமாக இருந்திருக்கிறது. 15ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சில தகவல்கள் பிற்கால ஆய்வுகளால் மாறியிருக்கின்றன. ந.சஞ்சீவி படிக்க சுவாரசியமாகவே இதைத் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அநேக இடங்களில் அடைப்புக்குறிக்குள் அவரின் கருத்தை எழுதியிருப்பது சற்று ஆயாசமாக இருக்கிறது.  பாளையக்காரர்களின் போர்களைப்பற்றிய இடங்களில் ஏறக்குறைய விளையாட்டு வர்ணனை அளவுக்கு இந்த அடைப்புக்குறி கருத்துகள் இருக்கின்றன.  அதுவும் அவரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு ஏற்ப இந்த கருத்துகள் இருக்கின்றன. அவரின் மொழிபெய...

Mauve - How One Man Invented a Color That Changed the World

நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் வெங்கடாசலம். நான் Popular science எனும் வகைமையைச் சார்ந்த Mauve எனும் புத்தகத்தை அண்மையில் படித்தேன். புத்தகத்தைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதன்மையாக இது ஒரு வாழக்கை வரலாற்று நூல். William Perkin எனும் வேதியியல் விஞ்ஞானியின் வாழ்க்கை, அவரின் கண்டுபிடிப்பு மற்றும் அதனால் தொழிற்துறையிலும் அறிவியல் துறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் தான் புத்தகத்தின் சாரம். முதலில் William Perkin பற்றியும் அவர் எவ்வாறு இந்த கண்டுபிடிப்பை நோக்கிச் சென்றார் என்றும் பார்ப்போம். William Perkin 1838 இல் பிறந்தார். அவர் தந்தை தச்சுத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெர்கினுக்கு இளைய வயதில் நிறைய விஷயங்களில் ஆர்வம் இருந்தது. வேதியியல் ஆர்வம் பின்னாட்களில் தான் வந்தது. ஆனால், அவரின் தாத்தா ரசவாதி என பெயர் பெற்றிருந்தார். இப்போது அக்காலத்தில் இருந்த அறிவியல் தேவைகளையும் பிற முன்னேற்பாடுகளைப் பற்றியும் சில வார்த்தைகள். 19ஆம் நூற்றண்டில் வெப்பமண்டல காலனிய நாடுகளில் இருந்த ஆங்கில சிப்பாய்கள் நிறைய பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். ...