Skip to main content

Posts

கா(ப்)பியும் காஞ்சிபுரமும்

எங்க‌ வீட்டில‌ எல்லாம் ஒரு நாளைக்கு சாதரணமா அஞ்சு த‌ட‌வ‌ எல்லாம் காப்பிக் குடிக்க‌லாம்.அதுவும் மாசி மக‌ம், ந‌ட‌வா திருவிழான்னா கேட்க‌வே வாணாம்.ஊர்ல‌ இருந்து சொந்த‌ கார‌ங்க‌ batch batch ஆ தான் வ‌ருவாங்க‌. எங்க‌ம்மா ஒவ்வொரு முறையும் அடுப்ப‌ங்க‌ரைக்கு போய் காப்பிய‌ப் போட‌ ஆர‌ம்புச்சுடுவாங்க‌.நாம‌ அப்ப‌டியே வ‌ந்துருக்கிற‌வ‌ங்களுக்கு கொடுக்கும் போது கூட‌ ஒன்னு வாங்கிக்கலாம். நாக்கு எந்நேரமும் தெகட்டிட்டே இருந்தாலும் அத பத்தியெல்லாம் நாங்க கவலைப்படறுதுல்ல.சில சமயம் ஏன் இந்த கச்சபேஸ்வரரும் கரி வரதரும் வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் வராங்கன்னு தோணும். இதுல‌ என்ன‌ பெரிய‌ விஷ‌ய‌ம்னா ஊர்ல‌ இருக்கிற‌ எல்லாருக்கும் ஒரு 90% சொந்தக்காரங்க காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், ஐயம்பேட்டை(காஞ்சிபுரம் பக்கத்திலயும் ஒன்னு இருக்குது) தான்.இப்ப தக்கோலம் (பொன்னியின் செல்வன்ல வர இராஜாதித்தர் போர் புரிந்த இடம் தாங்கோ) பக்கமும் பொன்னு கொடுத்து பொன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.மெட்ராஸ்ல எல்லாம் சொந்தகாரங்க தெருக்கு ஒன்னு கூட தேறாது. இவங்க எல்லார் வீட்லயும் காப்பி கதை இத விடப் பெரிய கதை. எங்க அண்ணன் எங்க அம்மாட்ட காப்பி ...

நரசமங்கலம் குடைவரைக் கோயில்கள்

என்னுடைய முதல் புத்தகக் கண்காட்சி

எல்லோரும் அவங்களுடைய புத்தகக் கண்காட்சியைப் பத்தி எழுதிட்டாங்க.நாமும் கொஞ்சம் எழுதுவோமே.12.45 PM க்கு என்னோட முதல் புத்தகக் கண்காட்சிக்கு நுழையறேன்.முதலில் விகடனுக்கு தான் போனேன்.தேசாந்திரி மற்றும் வெற்றிக்கு ஏழு படிகள் இரண்டையும் எடுத்தாச்சு.அடுத்தது கிழக்கு தான்.உள்ள நுழையும் போதே பாலபாரதியைப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் கழித்து நானே போய் அவர்ட்ட நானே அறிமுகம் பண்ணிகிட்டேன்(வேற என்னத்த பண்றது...)அங்க இருந்து மு.க வையும் குருதிப்புனலையும் அள்ளிக்கிட்டேன்.பாவம் சில்லரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க கிழக்கில.அடுத்த முறை பத்ரி அதை சரி செய்துடுவார்னு(??) நினைக்கிறேன். பிறகு காலச்சுவடு,உயிர்மை,மணிமேகலை,நர்மதா,வானதி,கண்ணதாசன், குமுதம்.. நிறைய கடைக்குப் போய் கொஞ்சம் தான் வாங்கினேன்.எங்கம்மா 500 ரூ மேல வாங்காதடான்னு சொல்லி விட்டு இருந்தங்க.பார்த்தா 1200 ரூ மேல பில் இருக்கு ஆனா புத்தகங்கள் ரொம்பக் குறைவா இருக்க மாதிரி தான் இருந்தது.மணியும் 2.30 ஆயிடுச்சி.அங்க என்னடானனா சுத்தி சுத்தி விடறாங்க.2.45 க்கு வெளியே வ்ந்தாச்சு.சரி வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுப்போம்னு உள்ள் நுழைஞ்சி ஒரு தயிர் சாதம் வாங்கினா அது...