எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
இந்த குறளுக்கு நமக்கு பொருள் தெரியும். துணிந்தபின் எண்ணுவேன் என்பது இழுக்கு, பின் வேறென்ன செய்ய வேண்டும்?
திருக்குறள் மனிதன் அறத்தோடு வாழ வழி சொன்ன தொன்மையான நூல். தமிழில் திருக்குறளின் தொடர்ச்சியான நூலாக 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரரால் எழுதப்பட்ட நீதிநெறிவிளக்கம் கருதப்படுகிறது. அறத்தின் பாற்பட்ட வாழ்வின் அடிப்படைகளை விளக்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத வரும் ஒவ்வொருவரும் தன் முன்னோடிகளின் நூல்களை ஐயந்திரிபுற கற்றிருக்க வேண்டும். குமரகுருபரர் தன்னை தமிழின் நீண்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே நிலைநிறுத்துகிறார்.
கல்வியின் பயனும் சிறப்பும், கல்வியின்பம், கல்விச்செல்வம், புலவர் பெருமை, கற்றன மறவாமை, கல்வியழகே அழகு, பெரியோர் பணிவு, கற்றபடி நிற்றல், மேன்மக்கள் பெருமை, இறைமாட்சி, ஈகை, கருமமே கண்ணாயினார் போன்ற தலைப்புகளில் இன்னிசை வெண்பாக்களாக இயற்றியுள்ளார். ஏறக்குறைய திருக்குறளின் அதிகாரங்களையே நினைவுபடுத்தும்.
அதில் ஒரு வெண்பா
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
இப்போது முதல் பத்திக்கு வருவோம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
------ துணிந்த பிறகு.....
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
எனக்கு பிடித்த இன்னொரு வெண்பா, நிலையாமையைப் பற்றியது.
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.
( நீரில் தோன்றி சட்டென மறையும் குமிழி போன்றது இளமை, அலைகள் போல வந்து வந்து போகும் பொருட்செல்வம், நீரில் எழுதிய எழுத்துபோல் அழிந்துபோம் உடல். நம்மவர்களே, வாழ்க்கை இப்படியிருக்க இறைவனை வாழ்த்தாதது ஏன்?)
எண்ணுவம் என்பது இழுக்கு.
இந்த குறளுக்கு நமக்கு பொருள் தெரியும். துணிந்தபின் எண்ணுவேன் என்பது இழுக்கு, பின் வேறென்ன செய்ய வேண்டும்?
திருக்குறள் மனிதன் அறத்தோடு வாழ வழி சொன்ன தொன்மையான நூல். தமிழில் திருக்குறளின் தொடர்ச்சியான நூலாக 17 ஆம் நூற்றாண்டில் குமரகுருபரரால் எழுதப்பட்ட நீதிநெறிவிளக்கம் கருதப்படுகிறது. அறத்தின் பாற்பட்ட வாழ்வின் அடிப்படைகளை விளக்குகிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுத வரும் ஒவ்வொருவரும் தன் முன்னோடிகளின் நூல்களை ஐயந்திரிபுற கற்றிருக்க வேண்டும். குமரகுருபரர் தன்னை தமிழின் நீண்ட இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே நிலைநிறுத்துகிறார்.
கல்வியின் பயனும் சிறப்பும், கல்வியின்பம், கல்விச்செல்வம், புலவர் பெருமை, கற்றன மறவாமை, கல்வியழகே அழகு, பெரியோர் பணிவு, கற்றபடி நிற்றல், மேன்மக்கள் பெருமை, இறைமாட்சி, ஈகை, கருமமே கண்ணாயினார் போன்ற தலைப்புகளில் இன்னிசை வெண்பாக்களாக இயற்றியுள்ளார். ஏறக்குறைய திருக்குறளின் அதிகாரங்களையே நினைவுபடுத்தும்.
அதில் ஒரு வெண்பா
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.
இப்போது முதல் பத்திக்கு வருவோம்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
------ துணிந்த பிறகு.....
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்
எனக்கு பிடித்த இன்னொரு வெண்பா, நிலையாமையைப் பற்றியது.
நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்னே
வழுத்தாத தெம்பிரான் மன்று.
( நீரில் தோன்றி சட்டென மறையும் குமிழி போன்றது இளமை, அலைகள் போல வந்து வந்து போகும் பொருட்செல்வம், நீரில் எழுதிய எழுத்துபோல் அழிந்துபோம் உடல். நம்மவர்களே, வாழ்க்கை இப்படியிருக்க இறைவனை வாழ்த்தாதது ஏன்?)
Comments