நண்பர்களுக்கு வணக்கம். என் பெயர் வெங்கடாசலம். நான் Popular science எனும் வகைமையைச் சார்ந்த Mauve எனும் புத்தகத்தை அண்மையில் படித்தேன். புத்தகத்தைப் பற்றிய சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன். முதன்மையாக இது ஒரு வாழக்கை வரலாற்று நூல். William Perkin எனும் வேதியியல் விஞ்ஞானியின் வாழ்க்கை, அவரின் கண்டுபிடிப்பு மற்றும் அதனால் தொழிற்துறையிலும் அறிவியல் துறையிலும் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தாக்கங்கள் தான் புத்தகத்தின் சாரம்.
முதலில் William Perkin பற்றியும் அவர் எவ்வாறு இந்த கண்டுபிடிப்பை நோக்கிச் சென்றார் என்றும் பார்ப்போம்.
William Perkin 1838 இல் பிறந்தார். அவர் தந்தை தச்சுத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெர்கினுக்கு இளைய வயதில் நிறைய விஷயங்களில் ஆர்வம் இருந்தது. வேதியியல் ஆர்வம் பின்னாட்களில் தான் வந்தது. ஆனால், அவரின் தாத்தா ரசவாதி என பெயர் பெற்றிருந்தார்.
இப்போது அக்காலத்தில் இருந்த அறிவியல் தேவைகளையும் பிற முன்னேற்பாடுகளைப் பற்றியும் சில வார்த்தைகள்.
19ஆம் நூற்றண்டில் வெப்பமண்டல காலனிய நாடுகளில் இருந்த ஆங்கில சிப்பாய்கள் நிறைய பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அப்போது சிங்கோனா மரப்பட்டையில் இருந்து எடுக்கப்படும் கொய்னா ( சரியான ஆங்கில உச்சரிப்பு கொய்னயின்) மருந்து தான் உபயோகப்படுத்தப்பட்டது. சிங்கோனா தென்னமரிக்க நாடுகளான பெரு, பொலிவியா போன்றவற்றில் வளரும் மரம். இந்த மருந்து தேவையான அளவுகளில் கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் விலையும் அதிகமாக இருந்தது. செயற்கை முறையில் மருந்து தயாரிப்பதில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
அடுத்து இங்கிலாந்தில் வேதியியல் வளர்ந்த கதை.
ஆங்கிலேயர்கள் அடிப்படையில் வணிகத்தில் நிறைய ஈடுபாடு கொண்டவர்கள். ஓய்வு பெற்ற இந்திய ICS/IAS அதிகாரிகளைக் கேட்டால் ஆங்கிலேயர்கள் வணிகர்கள் மட்டுமே என்பார்கள். 1837 ஆம் ஆண்டு ஜெர்மனிய விஞ்ஞானி யொஸ்டஸ் லீபிக் இங்கிலாந்து அறிவியலுக்கான தேசமல்ல என்று ஜெர்மனி-இங்கிலாந்து கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார். ஏனெனில், வேதியியல் பரிசோதனைக்கூடத்தில் தான் பயிலப்படவேண்டுமென்பதே இங்கிலாந்துக்கு புதியது. ஆனால் ஜெர்மனியில் நிறைய பல்கலைக்கழகங்கள் முறையாக வேதியியலைப் பயிற்றுவித்தன. William Perkin பிறக்கும் போது வேதியியல் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்றுகூட இங்கிலாந்தில் இல்லை. 1840களில் தான் வேதியியல் கல்லூரி லண்டனில் தொடங்கப்பட்டது.
அடுத்து இங்கிலாந்தில் நிலவிய சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனையைப் பற்றிப் பார்ப்போம்.
நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் வாயுவில் தான் லண்டன் நகரின் விளக்குகள் ஒளிர்ந்தன. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே நிலக்கரி வாயு இதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான டன் நிலக்கரி உபயோகப்படுத்தப்பட இந்த செயல் முறையில் அபாயகரமான அசுத்தமான நீர், கந்தகம் மற்றும் திரவ தார் (கீல்) கழிவுகளாக வெளியேற்றப்பட்டன. இவை நீரில் கலந்ததால் நீர் நிலைகள் மாசடைந்தன, மீன்கள் இறந்தன. இவற்றை கழிவுகளாக வெளியேற்றாமல் உபயோகப்படுத்த முடியுமா என ஆராய்ந்து கொண்டிருந்தனர். கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகம் ஆகியவற்றின் கலவைதான் இந்த திரவ தார்.
இந்த நேரத்தில் லண்டன் ராயல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த ஆகஸ்ட் ஹாஃப்மன் தாரிலிருந்து கொய்னயின் தயாரிப்பது பற்றிய ஓர் அறிவியல் கொள்கையை வெளியிட்டார். சில ஆண்டுகள் கழித்து கல்லூரியில் சேர்ந்த பெர்கினுக்கு ஹாஃப்மன் தான் கல்லூரி ஆசிரியாராக இருந்தார். பெர்கினின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டு தன் உதவியாளாராகவே ஆக்கிக்கொண்டார்.
பெர்கின் தன் வீட்டு எளிமையான பரிசோதனைக் கூடத்தில் கொய்னயின் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நிறமில்லாத கொய்னயின் தயாரிக்கும் முறையில் ஒரு சிவப்பு நிறப் பொடி ஒன்று கிடைத்தது. அதை மேலும் ஆராய்ந்து தூய்மைப்படுத்தியதில் இள ஊதா நிற சாயம் கிடைத்தது. இதன் வணிக சாத்தியங்கள் புரிந்ததில் செயற்கை சாயம் தயாரிக்கும் ஆலை அமைத்து மதிப்பு மிக்க தொழிலதிபரானார். 18 வயதில் தன் தந்தை மற்றும் தமையனின் துணையுடன் தொழிற்சாலையைத் தொடங்கினார். மூலப்பொருளின் 5 சதவீதமே உள்ள இந்த நிறத்தைப் பிரித்தெடுத்தது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
காப்புரிமைச் சட்டங்கள் பெரிதும் இல்லாத அக்காலத்தில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் வேறு செயற்கை வண்ணங்களை உருவாக்கினர். பெர்கினும் அடர் நீலம், பிரிட்டானியா வயலெட் போன்று வேறு நிறங்களை உருவாக்கினார். விக்டோரியா மகாராணியும் பிரான்ஸ் மகாராணி யுஜெனியும் பெர்கினின் நிறத்தை அன்றைய மேற்கு உலகத்தின் மோஸ்தராக்கினர். பெர்கின் என்ன நிறங்களை உருவாக்குகிறார் என்பது அவர் தொழிற்சாலையின் அருகில் ஓடும் Grand Junction கால்வாயில் ஓடும் நிறத்தைப்பார்த்தால் தெரியுமாம். செயற்கை நிறங்கள் அன்றைய ஆடை நாகரிகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. பின்னாட்களில் வாசனைத்திரவியங்களையும் உருவாக்கினார்.
செயற்கை நிறங்களைக் கண்டுபிடித்தது தான் அவரது சாதனையா? அடிப்படையான முன்னேற்றம் என்னவென்றால், வணிக மனப்பான்மை கொண்ட அனைவருக்கும் அறிவியல் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஊக்கம் கிடைத்தது. ஏகப்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இந்த ரசாயனத் தொழிற்சாலைகளால் நிறைய சுற்றுச்சூழல் மாசு பட்டன. பெர்கினும் 1873 இல் தன் நிறுவனத்தை விற்றுவிட்டு ஆராய்ச்சிக்கே திரும்பிவிட்டார். ஒரு நாட்டில் தொடங்கப்பட்ட ஒரு சிறு நிறுவனம் உலகம் முழுக்க ரசாயனம் சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்க ஊக்குவித்தது.
அவை வெறும் நிறங்கள் மட்டுமல்ல. பெர்கினின் கண்டுபிடிப்பு நோயாளிகளை குணப்படுத்த உதவியது.
1. ஜெர்மனின் பால் யலிட்ஷ் நிலக்கரி தாரிலிருந்து புற்று நோய் சிகிச்சை மருந்தான கீமோதெரபி மருந்தைப் பிரித்தெடுத்தார்.
2. நுண்ணுயிரிகளைப் பிரித்து பார்க்க இந்தச் சாயங்கள் பெரும் உதவி புரிந்தன. காச நோயை ஏற்படுத்தும் பாக்டிரியாவை இம்முறையில் தான் கண்டுபிடித்தனர்.
3. சாக்கரின் (செயற்கை இனிப்பு) இனிப்பும் நிலக்கரி தாரிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது.
4. உணவைப் பதப்படுத்த பயன்படும் அமிலங்களும் அதே முறையில் பிரித்தெடுக்கப்பட்டவைதான். இன்றைய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பெரும்பாலான உணவு பதப்படுத்தப்பட்டவை தான்.
5. இன்றைக்கு நடைமுறையில் ஏறக்குறைய இல்லையென்றாலும் புகைப்ப்ட சுருள்கள் மற்றும் வண்ணப்புகைப்படங்களுக்கும் நிலக்கரி தார் பயன்பட்டன.
6. உலகின் சிறந்த வலி நிவாரணியான ஆஸ்பிரினும் அம்மாதிரியான சாயக்கலவையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது தான்.
7. DNA, Chromosome போன்றவற்றை இந்தச் சாயங்களைக் கொண்டுதான் கண்டுபிடித்து ஆராய்ந்தனர்.
8. சில வண்ணச்சாயங்கள் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் குணத்தைப் பெற்றிருந்தன. அதைக்கொண்டுதான் ஜெர்மனியின் ஜெர்ஹார்ட் டொமஹாக் சல்ஃபா எனும் முதல் Anti Biotic மருந்தைக் கண்டுபிடித்தார்.
9. இன்றைய மருத்துவத்தில் CT Scan எடுக்கும் முறைகளில் Contrast என்ற ஒரு முறை உண்டு. நிறமில்லாத சாயத்தை உடலினுள் ஊசி மூலம் செலுத்தி உடனே CT Scan எடுப்பார்கள். உடலுறுப்புகள் ஒளி பெற்று தெளிவாகத் தெரியும்.
இந்த புத்தகம் பெர்கின் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகுதான் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் சைமன் கார்ஃபீல்டு ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர் போல இந்த புத்தகத்துக்காகத் தேடித்தேடி தகவல்களைச் சேகரித்துள்ளார். அறிவியலுடன் சேர்ந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முடிந்த வரை தெளிவாக எழுதியுள்ளார். சைமன் கார்ஃபீல்டு அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் கிண்டில் அன்லிமிடெட் இல் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.
புத்தகத்தின் தலைப்பு Mauve - How One Man Invented a Color That Changed the World
அனைவருக்கும் நன்றி.
முதலில் William Perkin பற்றியும் அவர் எவ்வாறு இந்த கண்டுபிடிப்பை நோக்கிச் சென்றார் என்றும் பார்ப்போம்.
William Perkin 1838 இல் பிறந்தார். அவர் தந்தை தச்சுத்தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். பெர்கினுக்கு இளைய வயதில் நிறைய விஷயங்களில் ஆர்வம் இருந்தது. வேதியியல் ஆர்வம் பின்னாட்களில் தான் வந்தது. ஆனால், அவரின் தாத்தா ரசவாதி என பெயர் பெற்றிருந்தார்.
இப்போது அக்காலத்தில் இருந்த அறிவியல் தேவைகளையும் பிற முன்னேற்பாடுகளைப் பற்றியும் சில வார்த்தைகள்.
19ஆம் நூற்றண்டில் வெப்பமண்டல காலனிய நாடுகளில் இருந்த ஆங்கில சிப்பாய்கள் நிறைய பேர் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அப்போது சிங்கோனா மரப்பட்டையில் இருந்து எடுக்கப்படும் கொய்னா ( சரியான ஆங்கில உச்சரிப்பு கொய்னயின்) மருந்து தான் உபயோகப்படுத்தப்பட்டது. சிங்கோனா தென்னமரிக்க நாடுகளான பெரு, பொலிவியா போன்றவற்றில் வளரும் மரம். இந்த மருந்து தேவையான அளவுகளில் கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் விலையும் அதிகமாக இருந்தது. செயற்கை முறையில் மருந்து தயாரிப்பதில் பலர் ஈடுபட்டிருந்தனர்.
அடுத்து இங்கிலாந்தில் வேதியியல் வளர்ந்த கதை.
ஆங்கிலேயர்கள் அடிப்படையில் வணிகத்தில் நிறைய ஈடுபாடு கொண்டவர்கள். ஓய்வு பெற்ற இந்திய ICS/IAS அதிகாரிகளைக் கேட்டால் ஆங்கிலேயர்கள் வணிகர்கள் மட்டுமே என்பார்கள். 1837 ஆம் ஆண்டு ஜெர்மனிய விஞ்ஞானி யொஸ்டஸ் லீபிக் இங்கிலாந்து அறிவியலுக்கான தேசமல்ல என்று ஜெர்மனி-இங்கிலாந்து கூட்டுக் கூட்டத்தில் அறிவித்தார். ஏனெனில், வேதியியல் பரிசோதனைக்கூடத்தில் தான் பயிலப்படவேண்டுமென்பதே இங்கிலாந்துக்கு புதியது. ஆனால் ஜெர்மனியில் நிறைய பல்கலைக்கழகங்கள் முறையாக வேதியியலைப் பயிற்றுவித்தன. William Perkin பிறக்கும் போது வேதியியல் பயிற்றுவிக்கும் கல்லூரி ஒன்றுகூட இங்கிலாந்தில் இல்லை. 1840களில் தான் வேதியியல் கல்லூரி லண்டனில் தொடங்கப்பட்டது.
அடுத்து இங்கிலாந்தில் நிலவிய சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனையைப் பற்றிப் பார்ப்போம்.
நிலக்கரியில் இருந்து எடுக்கப்படும் வாயுவில் தான் லண்டன் நகரின் விளக்குகள் ஒளிர்ந்தன. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே நிலக்கரி வாயு இதற்காக உபயோகப்படுத்தப்பட்டது. லட்சக்கணக்கான டன் நிலக்கரி உபயோகப்படுத்தப்பட இந்த செயல் முறையில் அபாயகரமான அசுத்தமான நீர், கந்தகம் மற்றும் திரவ தார் (கீல்) கழிவுகளாக வெளியேற்றப்பட்டன. இவை நீரில் கலந்ததால் நீர் நிலைகள் மாசடைந்தன, மீன்கள் இறந்தன. இவற்றை கழிவுகளாக வெளியேற்றாமல் உபயோகப்படுத்த முடியுமா என ஆராய்ந்து கொண்டிருந்தனர். கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் மற்றும் கந்தகம் ஆகியவற்றின் கலவைதான் இந்த திரவ தார்.
இந்த நேரத்தில் லண்டன் ராயல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்த ஆகஸ்ட் ஹாஃப்மன் தாரிலிருந்து கொய்னயின் தயாரிப்பது பற்றிய ஓர் அறிவியல் கொள்கையை வெளியிட்டார். சில ஆண்டுகள் கழித்து கல்லூரியில் சேர்ந்த பெர்கினுக்கு ஹாஃப்மன் தான் கல்லூரி ஆசிரியாராக இருந்தார். பெர்கினின் ஆர்வத்தையும் திறமையையும் கண்டு தன் உதவியாளாராகவே ஆக்கிக்கொண்டார்.
பெர்கின் தன் வீட்டு எளிமையான பரிசோதனைக் கூடத்தில் கொய்னயின் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். நிறமில்லாத கொய்னயின் தயாரிக்கும் முறையில் ஒரு சிவப்பு நிறப் பொடி ஒன்று கிடைத்தது. அதை மேலும் ஆராய்ந்து தூய்மைப்படுத்தியதில் இள ஊதா நிற சாயம் கிடைத்தது. இதன் வணிக சாத்தியங்கள் புரிந்ததில் செயற்கை சாயம் தயாரிக்கும் ஆலை அமைத்து மதிப்பு மிக்க தொழிலதிபரானார். 18 வயதில் தன் தந்தை மற்றும் தமையனின் துணையுடன் தொழிற்சாலையைத் தொடங்கினார். மூலப்பொருளின் 5 சதவீதமே உள்ள இந்த நிறத்தைப் பிரித்தெடுத்தது பெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
காப்புரிமைச் சட்டங்கள் பெரிதும் இல்லாத அக்காலத்தில் ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகள் வேறு செயற்கை வண்ணங்களை உருவாக்கினர். பெர்கினும் அடர் நீலம், பிரிட்டானியா வயலெட் போன்று வேறு நிறங்களை உருவாக்கினார். விக்டோரியா மகாராணியும் பிரான்ஸ் மகாராணி யுஜெனியும் பெர்கினின் நிறத்தை அன்றைய மேற்கு உலகத்தின் மோஸ்தராக்கினர். பெர்கின் என்ன நிறங்களை உருவாக்குகிறார் என்பது அவர் தொழிற்சாலையின் அருகில் ஓடும் Grand Junction கால்வாயில் ஓடும் நிறத்தைப்பார்த்தால் தெரியுமாம். செயற்கை நிறங்கள் அன்றைய ஆடை நாகரிகத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. பின்னாட்களில் வாசனைத்திரவியங்களையும் உருவாக்கினார்.
செயற்கை நிறங்களைக் கண்டுபிடித்தது தான் அவரது சாதனையா? அடிப்படையான முன்னேற்றம் என்னவென்றால், வணிக மனப்பான்மை கொண்ட அனைவருக்கும் அறிவியல் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஊக்கம் கிடைத்தது. ஏகப்பட்ட தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இந்த ரசாயனத் தொழிற்சாலைகளால் நிறைய சுற்றுச்சூழல் மாசு பட்டன. பெர்கினும் 1873 இல் தன் நிறுவனத்தை விற்றுவிட்டு ஆராய்ச்சிக்கே திரும்பிவிட்டார். ஒரு நாட்டில் தொடங்கப்பட்ட ஒரு சிறு நிறுவனம் உலகம் முழுக்க ரசாயனம் சார்ந்த தொழிற்சாலைகள் தொடங்க ஊக்குவித்தது.
அவை வெறும் நிறங்கள் மட்டுமல்ல. பெர்கினின் கண்டுபிடிப்பு நோயாளிகளை குணப்படுத்த உதவியது.
1. ஜெர்மனின் பால் யலிட்ஷ் நிலக்கரி தாரிலிருந்து புற்று நோய் சிகிச்சை மருந்தான கீமோதெரபி மருந்தைப் பிரித்தெடுத்தார்.
2. நுண்ணுயிரிகளைப் பிரித்து பார்க்க இந்தச் சாயங்கள் பெரும் உதவி புரிந்தன. காச நோயை ஏற்படுத்தும் பாக்டிரியாவை இம்முறையில் தான் கண்டுபிடித்தனர்.
3. சாக்கரின் (செயற்கை இனிப்பு) இனிப்பும் நிலக்கரி தாரிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டது.
4. உணவைப் பதப்படுத்த பயன்படும் அமிலங்களும் அதே முறையில் பிரித்தெடுக்கப்பட்டவைதான். இன்றைய ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பெரும்பாலான உணவு பதப்படுத்தப்பட்டவை தான்.
5. இன்றைக்கு நடைமுறையில் ஏறக்குறைய இல்லையென்றாலும் புகைப்ப்ட சுருள்கள் மற்றும் வண்ணப்புகைப்படங்களுக்கும் நிலக்கரி தார் பயன்பட்டன.
6. உலகின் சிறந்த வலி நிவாரணியான ஆஸ்பிரினும் அம்மாதிரியான சாயக்கலவையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது தான்.
7. DNA, Chromosome போன்றவற்றை இந்தச் சாயங்களைக் கொண்டுதான் கண்டுபிடித்து ஆராய்ந்தனர்.
8. சில வண்ணச்சாயங்கள் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் குணத்தைப் பெற்றிருந்தன. அதைக்கொண்டுதான் ஜெர்மனியின் ஜெர்ஹார்ட் டொமஹாக் சல்ஃபா எனும் முதல் Anti Biotic மருந்தைக் கண்டுபிடித்தார்.
9. இன்றைய மருத்துவத்தில் CT Scan எடுக்கும் முறைகளில் Contrast என்ற ஒரு முறை உண்டு. நிறமில்லாத சாயத்தை உடலினுள் ஊசி மூலம் செலுத்தி உடனே CT Scan எடுப்பார்கள். உடலுறுப்புகள் ஒளி பெற்று தெளிவாகத் தெரியும்.
இந்த புத்தகம் பெர்கின் இறந்து நூறாண்டுகளுக்குப் பிறகுதான் எழுதப்பட்டுள்ளது. எழுத்தாளர் சைமன் கார்ஃபீல்டு ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளர் போல இந்த புத்தகத்துக்காகத் தேடித்தேடி தகவல்களைச் சேகரித்துள்ளார். அறிவியலுடன் சேர்ந்த வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை முடிந்த வரை தெளிவாக எழுதியுள்ளார். சைமன் கார்ஃபீல்டு அடிப்படையில் ஒரு பத்திரிக்கையாளர். 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் கிண்டில் அன்லிமிடெட் இல் இலவசமாக படிக்கக் கிடைக்கிறது.
புத்தகத்தின் தலைப்பு Mauve - How One Man Invented a Color That Changed the World
அனைவருக்கும் நன்றி.
Comments