Skip to main content

2019 ஆம் ஆண்டின் சில நினைவுக்குறிப்புகள்


இந்த ஆண்டு முழுக்க பயணம் இருந்து கொண்டே இருந்தது. ஆண்டின் பெரும்பகுதி பாங்காக் நகரத்தில் கழிந்தது. ஒரு முறை ஜகார்த்தாவிற்கு செல்ல வேண்டியிருந்தது.

நண்பர்களுடன் தமிழ்நாட்டின் அருவிகளுக்கு (முக்கியமாக மேற்கு மலைத்தொடர்ச்சியோரம்) ஒரு சாலை வழிப் பயணம் சென்றேன். சென்னையில் கிளம்பி திற்பரப்பு, காளிகேசம், களக்காடு தலையணை அருவி, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு, குற்றாலம், குண்டாறு அருவி, கும்பவுருட்டி, சின்னச்சுருளி மற்றும் கும்பக்கரை சென்று திரும்பினோம். கன்னியாகுமரி முழுக்க ஜெயமோகன் கதைகளில் இறங்கி திரிவது போல இருந்தது. ஆரல்வாய்மொழி கணவாய், திற்பரப்பு அருவியின் இரவு, ஆற்றங்கரையோர இசக்கி (யக்‌ஷி), ரப்பர் மரங்கள், மகாதேவர் ஆலயம், திருவட்டாறில் நாகப்பிரதிஷ்டை செய்த அரசமரம், கதகளி அரங்கம், கீரிப்பாறை, பழம்பொறி, ரசவடை என. நாங்கள் ஜூலை முதல் வாரத்தில் பயணித்தோம். திருநெல்வேலிக்கு வடக்கே ஒரு அருவியிலும் நீரில்லை. திற்பரப்பிலும், காளிகேசத்திலும், களக்காடு தலையணையிலும் ஊறிப்போய் வந்தோம்.

இந்த ஆண்டு விஷ்ணுபுர வாசக வட்டத்தின் ஊட்டி காவிய முகாமில் கலந்து கொண்டேன். மூன்று நாட்களும் உற்சாகமாக இருந்தது. தலையில் தட்டி உட்கார வைத்த மாதிரியும் இருந்தது. படிக்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதுடன் சில நல்ல நண்பர்களும் கிடைத்தனர். ஆண்டின் இறுதியில் விஷ்ணுபுர விருது விழாவில் கலந்து கொள்ளவிருந்த வேளையில் விழாவிற்கு முந்தைய தினம் செய்த மருத்துவ சோதனையில் ஓர் அதிர்ச்சி. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயத்தில், கோயம்புத்தூர் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. எல்லாம் நல்ல படியாக முடிந்து ஆண்டின் இறுதியில் ஓய்வில் இருக்கிறேன்.


இந்த ஆண்டு கிண்டிலில் நிறைய புத்தகங்கள் படிக்க முடிந்தது. நிறைய பணிச்சுமையுடன் படிக்கவும் முடிந்தது. முதல் முறையாக ஒலிப்புத்தகம் கேட்கவும் ஆரம்பித்துள்ளேன். சில புத்தகங்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்க வேண்டியதாயிருந்தது. இன்னும் நிறைய கேட்க வேண்டும். பாங்காக்கில் இரவு 11 மணிமுதல் 1 அல்லது 2 மணிவரை படிக்க நேரம் கிடைத்தது. Goodreads தளத்தில் கல்லூரி நண்பர்கள் ஒரு குழுமம் ஆரம்பித்தோம். மாதம் ஒரு புத்தகம் என ஜூன் மாதத்தில் இருந்து ஏழு புத்தகங்கள் படித்தோம். ஒரு மாதத்தில் மட்டும் அவர்கள் விருப்பப்பட்ட புத்தகங்களைப் படிக்கலாம் என்றோம். உற்சாகத்துடன் தொடர்வதுடன் நண்பர்கள் பிறரையும் அழைக்கும் எண்ணம் உள்ளது.

நான் இந்த ஆண்டு படித்த புத்தகங்களில் எனக்கு பிடித்தவை

1. யுகத்தின் முடிவில் - இராவதி கர்வே
2. அபிப்பிராய சிந்தாமணி - ஜெயமோகன்
3. Ready To Fire - Nambi Narayanan
4. பாரீசுக்குப் போ! - ஜெயகாந்தன்
5. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்
6. புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்
7. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதையர்
8. Rivers Remember - Krupa Ge
9. இந்திய ஞானம் - ஜெயமோகன்
10. Nine Rupees an Hour: Disappearing Livelihoods of Tamil Nadu - Aparna Karthikeyan
11. The Bhagavad Gita: A Biography - Richard Davis
12. Bad Blood - John Carreyrou

இந்த ஆண்டு படித்த புத்தகங்களின் பட்டியல்.

1. DR. VIKRAM AMBALAL SARABHAI - Agrawal, S.K.
2. யுகத்தின் முடிவில் - இராவதி கர்வே
3. அபிப்பிராய சிந்தாமணி - ஜெயமோகன்
4. உருவாகும் உள்ளம் - V.S. Ramachandran
5. The Glass Palace - Amitav Ghosh
6. Year of Magical Thinking - Joan Didion
7. The Power of Habit - Charles Duhigg
8. Ready To Fire - Nambi Narayanan
9. இயற்கையை அறிதல் - Ralph Waldo Emerson (தமிழில் - ஜெயமோகன்)
10. தாத்ரிகுட்டியின் ஸ்மார்த்த விசாரம் - ஆலங்கோடு லீலாகிருஷ்ணன் (தமிழில் - யூமா வாசுகி)
11. கற்றதும் பெற்றதும் 4 - சுஜாதா
12. தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி
13. கற்றதும் பெற்றதும் 3 - சுஜாதா
14. ஓரிரு எண்ணங்கள் - சுஜாதா
15. The Outsourcer - Dinesh Sharma
16. மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம் - சுஜாதா
17. பாரீசுக்குப் போ! - ஜெயகாந்தன்
18. அன்பு வழி - Pär Lagerkvist (தமிழில் - க.நா.சு)
19. புரிதலுக்கான சிறு வெளிச்சம் - விமலாதித்த மாமல்லன்
20. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்
21. புனைவு என்னும் புதிர் - விமலாதித்த மாமல்லன்
22. என் சரித்திரம் - உ.வே.சாமிநாதையர்
23. Eleanor Oliphant Is Completely Fine - Gail Honeyman
24. திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை - Porus Munshi (தமிழில் - ராமன் ராஜா)
25. நகலிசைக் கலைஞன் - ஜான் சுந்தர்
26. மார்த்தாண்ட வர்மா - சி.வி.ராமன் பிள்ளை (தமிழில் - பத்மநாபன் தம்பி)
27. Becoming Nigerian: A Guide - Elnathan John
28. நிலம் - பவா செல்லதுரை
29. தங்க முடிச்சு - சுஜாதா
30. Rivers Remember - Krupa Ge
31. அபூர்வ மனிதர்கள் - தி.ஜானகிராமன்
32. Crazy Rich Asians - Kevin Kwan
33. நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர் (தமிழில் - கே.வி.ஜெயஸ்ரீ)
34. Tamarind City - Bishwanath Ghosh
35. ஆறாவடு - சயந்தன்
36. கற்பனைக்கும் அப்பால் - சுஜாதா
37. எழுத்துக் கலை - விமலாதித்த மாமல்லன்
38. இந்திய ஞானம் - ஜெயமோகன்
39. Consider Phlebas - Iain Banks
40. Bossypants - Tina Fey
41. நினைவு அலைகள் - தி.சே.சௌ.ராஜன்
42. ஜே ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி
43. A study in the Scarlet - Arthur Conan Doyle
44. தலித்துகளும் நிலமும்: பஞ்சமி நிலம் கிடைத்த வரலாறு - ரவிக்குமார்
45. கெடைகாடு - ஏக்நாத்
46. The Sign of Four - Arthur Conan Doyle
47. ஆங்காரம் - ஏக்நாத்
48. வயல் காட்டு இசக்கி - அ.கா.பெருமாள்
49. 281 and Beyond - V.V.S. Laxman
50. மணற்கேணி - யுவன் சந்திரசேகர்
51. பாம்பின் கண் - தியடோர் பாஸ்கரன்
52. 143 குறுவரிக் களம் - பா.ராகவன்
53. Nine Rupees an Hour: Disappearing Livelihoods of Tamil Nadu - Aparna Karthikeyan
54. The Bhagavad Gita: A Biography - Richard Davis
55. கொம்பு முளைத்தவன் - பா.ராகவன்
56. லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - இசை
57. கானல் நதி - யுவன் சந்திரசேகர்
58. வைரமுத்துவின் திருட்டாற்றுப்படை - விமலாதித்த மாமல்லன்
59. Bad Blood - John Carreyrou

Goodreads தளத்தில் நான் படித்த புத்தகங்களின் தகவல்கள் - https://www.goodreads.com/user/year_in_books/2019/15184294


Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...