தியடோர் பாஸ்கரன் ஆங்கிலத்தில் எழுதிய The Eye Of The Serpent என்ற நூலை திரு.லதானந்த் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நான் தியடோர் பாஸ்கரனின் எம் தமிழர் செய்த படம் என்ற நூலை முன்பே வாசித்திருக்கிறேன். இந்த நூல்தான் முதலில் எழுதப்பட்டது என்றாலும், ஏற்கனவே எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் உள்ள தகவல்கள் நிறைய இதிலும் உள்ளதால் படிப்பதிலுள்ள ஆர்வம் சற்று மட்டுப்பட்டது. தியடோர் பாஸ்கரனின் அழகிய சரளமான பத்தி மொழி எழுத்து எனக்கு மிகவும் பிடித்தது. கானுயிர் சார்ந்த தமிழ் எழுத்தில் முன்னோடியான அவரின் கானுயிர் நூல்கள் மகத்தானவை.
தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் அளவுக்கு மௌன படங்களையும் ஆரம்ப கால பேசும் படங்களையும் ஆராய்ந்தவர்கள் இல்லையென்றே நினைக்கிறேன். ராண்டார் கை சில நூல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்தாலும், ராண்டார் கை சென்னையை மையமாகக் கொண்டே நிறைய எழுதியுள்ளார். தியடோர் பாஸ்கரனின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று திரைப்படம் மதச்சார்பற்ற கலை வடிவம் என்பது. இந்தியாவின் பாரம்பரிய கலைகள் கோயில் பண்பாட்டை ஒட்டியே இருந்ததால் அவை கலைகள் ஆயினும் மதத்தோடு கொண்ட தொடர்பு தவிர்க்க முடியாததாயிற்று. அதைவிட முக்கியம் இன்றும் நமக்கு தேர்ந்த விமர்சன வடிவமோ அறிவோ இல்லாதது. அவர் குறிப்பிடும் குறைகளில் இன்னொன்று, நாம் திரைப்படத்தை நாடகத்தின் இன்னொரு வடிவமாக எண்ணியது இன்றும் தொடர்கிறது. மேடை நாடகங்களில் இருந்த பாடல் காட்சிகள் இவ்வாறே இன்றும் தொடர்கின்றன.
எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் இருந்தே நான் ஆர்வத்துடன் படித்து வருவது, திரைப்படத்தை ஒரு தொழிலாக நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது. சாமிக்கண்ணு வின்சென்ட் (ஏறக்குறைய தமிழ் நாட்டின் தாதாசாஹேப் பால்கே), ஆர்.வெங்கையா ( இந்தியர் ஒருவரால் சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் கெயிட்டி, பின்னர் ராக்ஸி தியேட்டர்), நடராஜ முதலியார் (சென்னையின் முதல் ஸ்டுடியோ மற்றும் முதல் தமிழ் சலனப்படம் கீசக வதம் எடுத்தவர்) மற்றும் ராஜா சாண்டோ என்று திரைப்படத்தின் மேல் ஆர்வம் கொண்டு இயங்கிய முன்னோடிகளைப் பற்றி இவரே எழுதியுள்ளார். ஆர்.வெங்கையாவின் மகனான ரகுபதி பிரகாசா தமிழ் திரைப்பட தொழிலுக்கு நல்ல அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர். இவர்களில் சிலரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜியே (https://www.youtube.com/watch?v=qBfUwqeImqA) முன்னோடிகளைப் பற்றி திரைத்துறையினரை விட இதில் ஈடுபடாத இவருக்குத்தான் நிறைய தெரிந்திருக்கிறது என்று பேசினார். நம் வரலாற்று மனநிலையின் ஓர் உதாரணம் இது.
கீசக வதம் படத்தில் நடித்தவர்களுக்கு பயிற்சி அளித்தவர் பம்மல் சம்மந்த முதலியாரின் சுகுணவிலாஸ் சபாவின் நடிகர் ரங்கவடிவேலு. நாம் அன்றிலிருந்து இன்றும் திரைப்படம் என்பது நாடக மேடைக்கு பதிலாக அமைந்த இன்னொரு மேடை என்றே எண்ணி வருகிறோம். இன்றைக்கு உலகத்திரைப்படங்களுக்கு Subtitles இருப்பது போல அன்றைய மௌனப்படங்களின் காட்சிகளுக்கு விவரணை அட்டைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
புத்தகம் முழுக்க இந்திய திரைப்பட உலகின் முன்னோடிகளின் முயற்சிகளும் வெற்றிகளும் தோல்விகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இவ்வளவு தகவல்களை சேகரித்து, கால வரிசைப்படுத்தி, தொடர்புகளை தெளிவு படுத்தி தெளிவான மொழியில் எழுதியுள்ளார். எப்பேர்ப்பட்ட உழைப்பு! அவரின் கானுயிர் நூல்களுக்கு ஈடான உழைப்பை தமிழ் திரைப்பட வரலாற்றின் ஆரம்ப நாட்களுக்கு வழங்கியுள்ளார். அவரின் தேர்ந்த ரசனை அக்கால திரைப்படங்களை விமர்சன ரீதியாகவும் அணுக வைத்துள்ளது. நிறைய படங்களின் பிரதிகளே இல்லையென்றாலும் தகவல்களைத் தேடிதேடி கண்டுபிடித்துள்ளார். கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரின் பொக்கிஷங்கள் இவருக்கு உதவியிருக்கின்றன. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அமைய முயன்றவர்களில் தியடோர் பாஸ்கரனும் ஒருவர். எம் தமிழர் செய்த படத்தை விட மிக அதிக தகவல்களை இந்த புத்தகம் உள்ளடக்கியிருந்தாலும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் திரைப்படங்களை தம் வாழ்வை விட மேலாக நினைக்கும் தமிழர்களுக்கும் இப்புத்தகம் முக்கியமான ஆவணம்.
தமிழ் திரைப்பட வரலாற்றில் அவர் அளவுக்கு மௌன படங்களையும் ஆரம்ப கால பேசும் படங்களையும் ஆராய்ந்தவர்கள் இல்லையென்றே நினைக்கிறேன். ராண்டார் கை சில நூல்களை எழுதியுள்ளார் என்பது தெரிந்தாலும், ராண்டார் கை சென்னையை மையமாகக் கொண்டே நிறைய எழுதியுள்ளார். தியடோர் பாஸ்கரனின் முக்கியமான அவதானிப்புகளில் ஒன்று திரைப்படம் மதச்சார்பற்ற கலை வடிவம் என்பது. இந்தியாவின் பாரம்பரிய கலைகள் கோயில் பண்பாட்டை ஒட்டியே இருந்ததால் அவை கலைகள் ஆயினும் மதத்தோடு கொண்ட தொடர்பு தவிர்க்க முடியாததாயிற்று. அதைவிட முக்கியம் இன்றும் நமக்கு தேர்ந்த விமர்சன வடிவமோ அறிவோ இல்லாதது. அவர் குறிப்பிடும் குறைகளில் இன்னொன்று, நாம் திரைப்படத்தை நாடகத்தின் இன்னொரு வடிவமாக எண்ணியது இன்றும் தொடர்கிறது. மேடை நாடகங்களில் இருந்த பாடல் காட்சிகள் இவ்வாறே இன்றும் தொடர்கின்றன.
எம் தமிழர் செய்த படம் புத்தகத்தில் இருந்தே நான் ஆர்வத்துடன் படித்து வருவது, திரைப்படத்தை ஒரு தொழிலாக நாம் எவ்வாறு எதிர்கொண்டோம் என்பது. சாமிக்கண்ணு வின்சென்ட் (ஏறக்குறைய தமிழ் நாட்டின் தாதாசாஹேப் பால்கே), ஆர்.வெங்கையா ( இந்தியர் ஒருவரால் சென்னையில் கட்டப்பட்ட முதல் தியேட்டர் கெயிட்டி, பின்னர் ராக்ஸி தியேட்டர்), நடராஜ முதலியார் (சென்னையின் முதல் ஸ்டுடியோ மற்றும் முதல் தமிழ் சலனப்படம் கீசக வதம் எடுத்தவர்) மற்றும் ராஜா சாண்டோ என்று திரைப்படத்தின் மேல் ஆர்வம் கொண்டு இயங்கிய முன்னோடிகளைப் பற்றி இவரே எழுதியுள்ளார். ஆர்.வெங்கையாவின் மகனான ரகுபதி பிரகாசா தமிழ் திரைப்பட தொழிலுக்கு நல்ல அடித்தளம் அமைத்தவர்களில் ஒருவர். இவர்களில் சிலரை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவாஜியே (https://www.youtube.com/watch?v=qBfUwqeImqA) முன்னோடிகளைப் பற்றி திரைத்துறையினரை விட இதில் ஈடுபடாத இவருக்குத்தான் நிறைய தெரிந்திருக்கிறது என்று பேசினார். நம் வரலாற்று மனநிலையின் ஓர் உதாரணம் இது.
கீசக வதம் படத்தில் நடித்தவர்களுக்கு பயிற்சி அளித்தவர் பம்மல் சம்மந்த முதலியாரின் சுகுணவிலாஸ் சபாவின் நடிகர் ரங்கவடிவேலு. நாம் அன்றிலிருந்து இன்றும் திரைப்படம் என்பது நாடக மேடைக்கு பதிலாக அமைந்த இன்னொரு மேடை என்றே எண்ணி வருகிறோம். இன்றைக்கு உலகத்திரைப்படங்களுக்கு Subtitles இருப்பது போல அன்றைய மௌனப்படங்களின் காட்சிகளுக்கு விவரணை அட்டைகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
புத்தகம் முழுக்க இந்திய திரைப்பட உலகின் முன்னோடிகளின் முயற்சிகளும் வெற்றிகளும் தோல்விகளும் வந்து கொண்டே இருக்கின்றன. இவ்வளவு தகவல்களை சேகரித்து, கால வரிசைப்படுத்தி, தொடர்புகளை தெளிவு படுத்தி தெளிவான மொழியில் எழுதியுள்ளார். எப்பேர்ப்பட்ட உழைப்பு! அவரின் கானுயிர் நூல்களுக்கு ஈடான உழைப்பை தமிழ் திரைப்பட வரலாற்றின் ஆரம்ப நாட்களுக்கு வழங்கியுள்ளார். அவரின் தேர்ந்த ரசனை அக்கால திரைப்படங்களை விமர்சன ரீதியாகவும் அணுக வைத்துள்ளது. நிறைய படங்களின் பிரதிகளே இல்லையென்றாலும் தகவல்களைத் தேடிதேடி கண்டுபிடித்துள்ளார். கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரின் பொக்கிஷங்கள் இவருக்கு உதவியிருக்கின்றன. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் அமைய முயன்றவர்களில் தியடோர் பாஸ்கரனும் ஒருவர். எம் தமிழர் செய்த படத்தை விட மிக அதிக தகவல்களை இந்த புத்தகம் உள்ளடக்கியிருந்தாலும் வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் திரைப்படங்களை தம் வாழ்வை விட மேலாக நினைக்கும் தமிழர்களுக்கும் இப்புத்தகம் முக்கியமான ஆவணம்.
Comments