நவீன தமிழிலக்கியத்தின் முதல் விமர்சகராகக் கருதப்படும் க நா சு வின் பரிந்துரைகள் இன்னமும் முக்கியமானவையாகவே கருதப்படுகின்றன. அவர் இந்த நூலைப் பற்றி உயர்வாகவே எழுதியுள்ளது இந்த புத்தகத்தைப் பரிந்துரைக்க ஒரு காரணம். நான் ராஜனின் தமிழ் நாட்டில் காந்தி படித்திருக்கிறேன். அவரின் எளிய நடை அப்போதே பிடித்திருந்தது.
இந்த நூலின் நடையைப் பற்றியும் சொல்ல வேண்டும். இந்திய சுதந்தரப் போரட்ட வரலாற்றின் பெரும் மனிதர்கள் இவரின் எளிமையான மொழி நடையில் இயல்பாக வந்து போகின்றனர். அலங்காரங்களற்ற மின்னும் எளிமையின் அழகு படிக்க இனிமையானது. தொழில் முறையில் மருத்துவரான இவருக்கு எளிய தமிழ் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அவரது வைணவ பின்புலம் நிச்சயம் உதவியிருக்கிறது.
இளமையில் ஏழ்மையில் தான் இருந்துள்ளார். ஆனால் ஏழ்மை ஒரு சாதாரணமான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. உறுதியோடு மருத்துவம் பயின்று பர்மா சென்றிருக்கிறார். தன் வரலாற்று நூலைப்பற்றி எழுத நேரும் போது புத்தகத்தின் தகவல்களை எழுத நேர்ந்து விடுகிறது. நாம் அறிந்த காலகட்டத்தில் நமக்கு தெரிந்த வரலாற்று தகவல்களின் இடைவெளிகளில் ஒளி பாய்ச்சியிருக்கிறார் ராஜன்.
வெறும் தகவலாகவோ கதைபோலவோ பயின்ற வ.உ.சியின் சுதேசிக்கப்பலில் ராஜன் பயணித்திருக்கிறார். தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் சுதந்தர போரட்டக்களமாக இருந்த தூத்துக்குடி, திருநெல்வேலியில் முக்கிய தளகர்த்தர் வ.வே.சு ஐயர். அவருக்கே சுதந்தர உணர்வு விநாயக் சாவர்க்கரால் கிடைத்திருகிறது. லண்டனில் இந்தியர் விடுதியில் அவர்களுடன் ராஜனும் தங்கியிருந்து அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்திருக்கிறார். அவர்களில் ஒருவர் (லண்டனில் ஆங்கில அதிகாரியைக் கொலை செய்ததற்காக) தூக்கிலிடப்பட்டதையும் (மதன்லால் திங்ரா), அந்தமானுக்கு தீவாந்தரம் அனுப்பப்பட்டதையும் (அநேகமாக சாவர்க்கர்) குறிப்பிடுகிறார். இவரையும் உளவு பார்த்திருக்கிறார்கள். தூத்துக்குடிக்கு வந்து இறங்கியவுடன் விசாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.
ராஜனே பின்பு காந்தியுடனும் ராஜாஜியுடனும் நெருங்கி அவர்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். அக்காலத்தைய காங்கிரஸின் தீவிரவாதிகளுடனும் மிதவாதிகளுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
ஸ்ரீரங்கம் வைதீகத்தின் கோட்டையென்று ராஜனே பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவர் வாழ்வில் பெரும் நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார். கடல் தாண்டி பர்மா மற்றும் லண்டன் போனதால், ஆலய நுழைவு போரட்டத்தை தமிழகத்தில் தலைமையேற்று நடத்தியதால் என பல நிகழ்வுகள். தமிழ்நாட்டின் ஆலய நுழைவு போராட்டத்திற்கு யார் யாரோ உரிமை கொண்டாடும் காலத்தில் இவரை அநேகமாக அனைவருமே மறந்துவிட்டிருக்கிறோம். ராஜன் நெருக்கடிகளால் சோர்ந்தும் போகவில்லை , நெருப்பாற்றில் நீந்தியதாய் அலங்காரமாய் மார்தட்டிக்கொள்ளவுமில்லை. வடகலை வைணவ ஜீயரின் கௌரவமான ஆலய தரிசனத்திற்கு இவரே பின்பு உதவியுமிருக்கிறார்.
இவர் தமிழ்நாட்டின் உப்பு சத்தியாகிரகத்திற்கும் தலைமையேற்றிருக்கிறார். போராட்டம் கைது நடவடிக்கையால் தடைபடாமல் இருக்க ஸ்ரீரங்கத்திலேயே இருந்திருக்கிறார். பின்பு வேதாரண்யத்திற்கு சென்று கைதாயிருக்கிறார்.
குறுகிய காலமே மந்திரியாக இருந்த இவரின் காலத்திலேயே தமிழ்நாட்டின் குடிநீருக்கு திட்டம் தீட்ட ராஜாஜி பணித்திருக்கிறார்.
இதையெல்லாம் விட ஆச்சர்யம், காந்தியின் வாக்கை வேதமாக எண்ணி மருத்துவ தொழிலை விட்டுவிட்டு கிராமத்துக்கு சென்று விவசாயம் பார்த்திருக்கிறார்.
இவ்வளவு உழைப்பும், படிப்பும், மாமனிதர்கள் நிரம்பிய வாழ்க்கையை எளிய அழகான வாக்கியங்களால் ஒளிரச்செய்திருக்கிறார்.
இந்த நூலின் நடையைப் பற்றியும் சொல்ல வேண்டும். இந்திய சுதந்தரப் போரட்ட வரலாற்றின் பெரும் மனிதர்கள் இவரின் எளிமையான மொழி நடையில் இயல்பாக வந்து போகின்றனர். அலங்காரங்களற்ற மின்னும் எளிமையின் அழகு படிக்க இனிமையானது. தொழில் முறையில் மருத்துவரான இவருக்கு எளிய தமிழ் வாய்க்கப்பெற்றிருக்கிறது. அவரது வைணவ பின்புலம் நிச்சயம் உதவியிருக்கிறது.
இளமையில் ஏழ்மையில் தான் இருந்துள்ளார். ஆனால் ஏழ்மை ஒரு சாதாரணமான விஷயமாகத்தான் இருந்திருக்கிறது. உறுதியோடு மருத்துவம் பயின்று பர்மா சென்றிருக்கிறார். தன் வரலாற்று நூலைப்பற்றி எழுத நேரும் போது புத்தகத்தின் தகவல்களை எழுத நேர்ந்து விடுகிறது. நாம் அறிந்த காலகட்டத்தில் நமக்கு தெரிந்த வரலாற்று தகவல்களின் இடைவெளிகளில் ஒளி பாய்ச்சியிருக்கிறார் ராஜன்.
வெறும் தகவலாகவோ கதைபோலவோ பயின்ற வ.உ.சியின் சுதேசிக்கப்பலில் ராஜன் பயணித்திருக்கிறார். தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் சுதந்தர போரட்டக்களமாக இருந்த தூத்துக்குடி, திருநெல்வேலியில் முக்கிய தளகர்த்தர் வ.வே.சு ஐயர். அவருக்கே சுதந்தர உணர்வு விநாயக் சாவர்க்கரால் கிடைத்திருகிறது. லண்டனில் இந்தியர் விடுதியில் அவர்களுடன் ராஜனும் தங்கியிருந்து அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்திருக்கிறார். அவர்களில் ஒருவர் (லண்டனில் ஆங்கில அதிகாரியைக் கொலை செய்ததற்காக) தூக்கிலிடப்பட்டதையும் (மதன்லால் திங்ரா), அந்தமானுக்கு தீவாந்தரம் அனுப்பப்பட்டதையும் (அநேகமாக சாவர்க்கர்) குறிப்பிடுகிறார். இவரையும் உளவு பார்த்திருக்கிறார்கள். தூத்துக்குடிக்கு வந்து இறங்கியவுடன் விசாரிக்கவும் செய்திருக்கிறார்கள்.
ராஜனே பின்பு காந்தியுடனும் ராஜாஜியுடனும் நெருங்கி அவர்களின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார். அக்காலத்தைய காங்கிரஸின் தீவிரவாதிகளுடனும் மிதவாதிகளுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்.
ஸ்ரீரங்கம் வைதீகத்தின் கோட்டையென்று ராஜனே பல இடங்களில் குறிப்பிடுகிறார். அவர் வாழ்வில் பெரும் நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார். கடல் தாண்டி பர்மா மற்றும் லண்டன் போனதால், ஆலய நுழைவு போரட்டத்தை தமிழகத்தில் தலைமையேற்று நடத்தியதால் என பல நிகழ்வுகள். தமிழ்நாட்டின் ஆலய நுழைவு போராட்டத்திற்கு யார் யாரோ உரிமை கொண்டாடும் காலத்தில் இவரை அநேகமாக அனைவருமே மறந்துவிட்டிருக்கிறோம். ராஜன் நெருக்கடிகளால் சோர்ந்தும் போகவில்லை , நெருப்பாற்றில் நீந்தியதாய் அலங்காரமாய் மார்தட்டிக்கொள்ளவுமில்லை. வடகலை வைணவ ஜீயரின் கௌரவமான ஆலய தரிசனத்திற்கு இவரே பின்பு உதவியுமிருக்கிறார்.
இவர் தமிழ்நாட்டின் உப்பு சத்தியாகிரகத்திற்கும் தலைமையேற்றிருக்கிறார். போராட்டம் கைது நடவடிக்கையால் தடைபடாமல் இருக்க ஸ்ரீரங்கத்திலேயே இருந்திருக்கிறார். பின்பு வேதாரண்யத்திற்கு சென்று கைதாயிருக்கிறார்.
குறுகிய காலமே மந்திரியாக இருந்த இவரின் காலத்திலேயே தமிழ்நாட்டின் குடிநீருக்கு திட்டம் தீட்ட ராஜாஜி பணித்திருக்கிறார்.
இதையெல்லாம் விட ஆச்சர்யம், காந்தியின் வாக்கை வேதமாக எண்ணி மருத்துவ தொழிலை விட்டுவிட்டு கிராமத்துக்கு சென்று விவசாயம் பார்த்திருக்கிறார்.
இவ்வளவு உழைப்பும், படிப்பும், மாமனிதர்கள் நிரம்பிய வாழ்க்கையை எளிய அழகான வாக்கியங்களால் ஒளிரச்செய்திருக்கிறார்.
Comments