Skip to main content

டிடிகே குழுமம்

1920 களில் திருவல்லிக்கேணி மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் வழக்குரைஞராவது பெரிய குறிக்கோள். திருவல்லிக்கேணியின் ஆறுபேர்கள் என்ற குழு 1878இல் ஹிந்து ஆங்கில இதழைத் தொடங்கியது. அந்த ஆறு பேரில் ஒருத்தர் டிடி ரங்காச்சாரி எனும் வழக்குரைஞர். சென்னையின் புகழ்பெற்ற வழக்குரைஞர் மட்டுமில்லாமல் பின்னாளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ஆனார்.

அவரின் மகன் டிடி கிருஷ்ணமாச்சாரி 1928இல் டிடிகே குழுமத்தை நிறுவினார். சென்னையில் பெரும் ஆச்சரியத்தை அளித்த முடிவு அது. தந்தையைப் போல நீதித்துறையில் நுழைவார் என்ற எதிர்பார்ப்புகளை மீறி வணிகத்தில் இறங்கினார். இன்று Unilever என்றழைக்கப்படும் நிறுவனம் (இடையில் Hindustan Lever என்றும் அழைக்கப்பட்டது)அந்நாளில் Lever Brothers என்றழைக்கப்பட்டது. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் இந்திய விநியோகஸ்தராக இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1930 களில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ள வணிகத்தை தன் பதின்ம வயது மகனான டிடி நரசிம்மனிடம் ஒப்படைத்தார். பின்னாளில் சுதந்திர இந்தியாவின் முதல் நிதியமைச்சாராக பொறுப்பேற்று லைசன்ஸ் ராஜ் என்று கிண்டலிக்கப்படும் அரசாங்கத்தின் கடுமையான தொழில்துறை கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து தான் ஆரம்பித்த நிறுவனத்துக்கும் பெரும் நட்டம் உண்டாக்கினார். டிடி நரசிம்மன் வெறுமனே விநியோகத்தோடு மட்டுமில்லாமல் சென்னையிலேயே பொருட்களை தயாரித்து விநியோகித்தார். இந்திராகாந்தி காலத்தில் மேலும் கடுமையான தொழில் கட்டுப்பாடுகளால் நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டன. டிடி நரசிம்மன் 1970 களில் தன் இரண்டாவது மகன் டிடி ஜகன்னாதனிடம் பெரும் கடன் சுமையோடு நிறுவனத்தை ஒப்படைத்தார். இந்த கடன்களை அவர்கள் இருபதாம் நூற்றாண்டில் இறுதியில் தான் அடைத்தனர்.

கடந்த மே மாதம் டிடி குழுமத்தின் நிர்வாக தலைவர் பொறுப்பிலிருந்து டிடி ஜகன்னாதன் ஓய்வு பெற்றார். டிடி குமுமத்தின் தோற்றம், வளர்ச்சி, தோல்வி மற்றும் கடைசியாக இந்தியாவின் மதிப்பு மிக்க தொழில் குழுமமாக மா(ற்)றியதைப் பற்றி அவர் எழுதியிருக்கும் (ஒரு பத்திரிக்கையாளரோடு சேர்ந்து) புத்தகம் - Disrupt and Conquer - How TTK Prestige Became a Billion Dollar Company.

இந்தியாவிற்கு லைஃப்பாய் சோப், வுட்வாட்ஸ் க்ரேப் வாட்டர் (குழுந்தை அழுகிறாதா, வுட்வாட்ஸ் கொடுக்கச் சொல்லு புகழ்), பான்ஸ் பவுடர், அட்லஸ் மற்றும் பெரும்பாலான இந்திய குடும்பங்களின் சமையலறையிலும் இருக்கும் Prestige குக்கர் என புகழ்பெற்ற பொருட்களை தயாரித்தும் விநியோகித்தும் பெரும் பேர் பெற்ற குழுமம். ஆனால் இவர்களின் வைரம் TTK Prestige என்ற நிறுவனம் தான். இவர்கள் எளிய குக்கரில் ஆரம்பித்து இன்றைக்கு ஏறக்குறைய 400 வகையான குக்கர்களை வடிவமைத்து விற்பனை செய்திருக்கின்றனர். Gasket Release System த்தைக் கண்டுபிடித்தவரே டிடி ஜகன்னாதன் தான். IIT சென்னையில் இயந்திரவியல் பொறியியல் பட்டமும் அமெரிக்காவின் புகழ்பெற்ற Cornell பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். TTK Prestige நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 8000 கோடி ரூபாய்க்கும் மேல்.

தன் வெற்றிக்கான (பிறரின் வெற்றிக்காகவும்) காரணங்களாக டிடி ஜகன்னாதன் இந்த நூலில் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

1. நாள்தோறும் தவறாமல் அலுவலகத்துக்கு செல்லுங்கள்
2. உயர்நிலை (high level) விஷங்களைப் பின்னுக்குத்தள்ளி விரிவான விவரங்களில் கவனம் செலுத்துங்கள். அப்படி செய்தால் உயர்நிலை விஷயங்கள் தானே நன்றாக நடக்கும்.
3. ஏட்டுக் கல்வியோடு அதைச் சரியாக பயன்படுத்தும் புத்தியும் (Common Sense) அவசியம்.

ஒரு விறுவிறுப்பான நாவலுக்கு இணையான சுவாரசியமான நூல். நிச்சயம் வாங்கிப் படிக்கவும்.


https://www.amazon.in/Disrupt-Conquer-Prestige-Billion-Dollar-Company/dp/0670090174

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...