சமீபகாலமாக புத்தக வாசிப்பு குறைந்தே இருந்தது. திடீரென்று தோன்றியதோ என்னவோ மறுபடியும் வாசிப்பின் சுகம் கிட்டியிருக்கிறது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
எளிமையாக, படிக்க சுகமான அனுபவங்கள். சின்ன அண்ணாமலை அவர்களின் நட்புகள் எனக்கு ஏறக்குறைய நாடக, திரைப்பட நடிகர், எழுத்தாளர் பாரதிமணி அவர்களை ஞாபகப்படுத்தியது. ராஜாஜி மீதான அவரின் பக்தி. கல்கியுடனான அவரின் நட்பு ஆச்சரியமாகவே இருந்தது. இவர் நடந்து வருகிறாரென்று கல்கி ஒரு காரையே இவருக்கு பரிசளித்திருக்கிறார். விடுதலைப் போரட்டத்தில் கைதுசெய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைப்பட்ட இவரை மக்கள் சிறையை உடைத்து மீட்டுள்ளனர். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரமானது. ஆனால் சாதாரணமாக சொல்லி செல்கிறார். இளமையில் மலேசியா பினாங்கில் இருந்து ஆங்கிலேயர்களால் இந்தியாவிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். மபொசியினுடனான நட்பை மிகவும் பெருமையான ஒன்றாக எண்ணியிருந்திருக்கிறார். தமிழ்பண்ணை பதிப்பகம் ஆரம்பித்து நல்ல நூல்களை பதிப்பித்திருக்கிறார். மிக முக்கியமாக திமுகவை எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கவும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார். நடிகர் மன்றத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். தனக்கான நடிகர் மன்றத்தைக் கூட தான் சேர்ந்த கட்சிக்காக தொடங்கியவர் சிவாஜியாகத்தான் இருக்கும்.
இவ்வளவு தகவல்களை எல்லாம் விட சின்ன அண்னாமலை அவர்களின் நடை உண்மையிலேயே படிக்க எளிமையாக இருக்கிறது. இவர் வாழ்க்கையின் முடிவும் நம்ப முடியாமல்தான் இருக்கிறது. தனது 60 ஆம் பிறந்த நாளன்று நடந்த விழாவில் நிறைய நீர் தலையில் ஊற்றிக் கொண்டே இருந்ததில் மேடையிலேயே மயங்கி மருத்துவமனை போகும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. தமிழ் இணைய பல்கலைகழகத்தில் தரவிறக்கக் கிடைக்கிறது.
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-37.htm
திரும்பிச் சென்ற தருணம்
பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு. குறிப்பிடத்தகுந்த பல கட்டுரைகளின் தொகுப்பு. மருது பாண்டியர்களின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மிக முக்கியமான கட்டுரை. விடுதலைப் போரில் தமிழகத்தில் நடந்த கொடுமைகளைக் கூட நம்மால் பிறர் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிம்பங்களை கட்டமைக்க மட்டுமே தெரியும் நமக்கு, வரலாற்றுக்கு பொய்யாகவும். மிகவும் ரசிக்கத்தக்க, புத்திசாலித் தனமான எழுத்து. பிரபந்தகளின் பாதிப்பும், கம்பனின் பாதிப்பும் புத்தகம் முழுக்க பரவி இருக்கிறது. பின்னட்டையில் இருக்கும் வாசகம் கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. பி.ஏ.கிருஷ்ணன் ஆழமாகவும் அகலமாகவும் பேசக் கூடியவர் என்று சுரா கூறியிருக்கிறார், ஆழமாகவும் அகலமாகவும் எழுதக் கூடியவர் என்பதற்கு இந்த புத்தகம் சான்று என எழுதியுள்ளனர். ஒவ்வொரு வாக்கியத்தையும் அனுபவித்து எழுதியுள்ளவருக்கு மொண்ணையாக எழுதப் பட்ட அறிமுகம். தந்தையின் நண்பரான பெ.நா.அப்புசாமியைப் பற்றி எழுதும் போது, ராஜாஜிக்கும் வலப்புறம் எனும்போது புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை. இனிமேல் வலது, இடது, புரட்சியெல்லாம் எத்தனைப் பேருக்கு புரியப் போகிறதென தெரியவில்லை. இங்கு எல்லாமே வலதை நோக்கிய பயணமாகவே இருக்கிறது.
எகிப்தைப் பற்றிய கட்டுரையை ஆராய்ச்சிக் கட்டுரை என்றே சொல்லமுடியும். ஆனால் படிக்க எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத எழுத்து. அவர் தந்தையைப் பற்றி எழுதும் போது உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறார். பிடர் பிடித்து உந்த நின்ற விதியைப் பற்றி கூறும் நிகழ்ச்சி உண்மையிலேயே கம்பன் கொடுத்த சமநிலைக்கு உதாரணம். அற்புதமான கம்பன். அங்கோர் வாட் பற்றிய கட்டுரையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அந்தமான் செல்லுலார் சிறை மற்றும் அந்தமான் பழங்குடிகளைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை.
காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. புத்தகத்தை இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-187-8.html
சொன்னால் நம்ப மாட்டீர்கள்
எளிமையாக, படிக்க சுகமான அனுபவங்கள். சின்ன அண்ணாமலை அவர்களின் நட்புகள் எனக்கு ஏறக்குறைய நாடக, திரைப்பட நடிகர், எழுத்தாளர் பாரதிமணி அவர்களை ஞாபகப்படுத்தியது. ராஜாஜி மீதான அவரின் பக்தி. கல்கியுடனான அவரின் நட்பு ஆச்சரியமாகவே இருந்தது. இவர் நடந்து வருகிறாரென்று கல்கி ஒரு காரையே இவருக்கு பரிசளித்திருக்கிறார். விடுதலைப் போரட்டத்தில் கைதுசெய்யப்பட்டு திருவாடனை சிறையில் அடைப்பட்ட இவரை மக்கள் சிறையை உடைத்து மீட்டுள்ளனர். அதன் பின் நடந்த துப்பாக்கிச் சூடு பயங்கரமானது. ஆனால் சாதாரணமாக சொல்லி செல்கிறார். இளமையில் மலேசியா பினாங்கில் இருந்து ஆங்கிலேயர்களால் இந்தியாவிறகு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். மபொசியினுடனான நட்பை மிகவும் பெருமையான ஒன்றாக எண்ணியிருந்திருக்கிறார். தமிழ்பண்ணை பதிப்பகம் ஆரம்பித்து நல்ல நூல்களை பதிப்பித்திருக்கிறார். மிக முக்கியமாக திமுகவை எதிர்க்கவும் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்கவும் நடிகர் சிவாஜி கணேசனுக்கு நடிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார். நடிகர் மன்றத்தின் தலைவராகவும் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். தனக்கான நடிகர் மன்றத்தைக் கூட தான் சேர்ந்த கட்சிக்காக தொடங்கியவர் சிவாஜியாகத்தான் இருக்கும்.
இவ்வளவு தகவல்களை எல்லாம் விட சின்ன அண்னாமலை அவர்களின் நடை உண்மையிலேயே படிக்க எளிமையாக இருக்கிறது. இவர் வாழ்க்கையின் முடிவும் நம்ப முடியாமல்தான் இருக்கிறது. தனது 60 ஆம் பிறந்த நாளன்று நடந்த விழாவில் நிறைய நீர் தலையில் ஊற்றிக் கொண்டே இருந்ததில் மேடையிலேயே மயங்கி மருத்துவமனை போகும் வழியிலேயே இறந்துவிட்டார். இந்த புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளது. தமிழ் இணைய பல்கலைகழகத்தில் தரவிறக்கக் கிடைக்கிறது.
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-37.htm
திரும்பிச் சென்ற தருணம்
பி.ஏ.கிருஷ்ணன் அவர்களின் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைத் தொகுப்பு. குறிப்பிடத்தகுந்த பல கட்டுரைகளின் தொகுப்பு. மருது பாண்டியர்களின் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி மிக முக்கியமான கட்டுரை. விடுதலைப் போரில் தமிழகத்தில் நடந்த கொடுமைகளைக் கூட நம்மால் பிறர் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. பிம்பங்களை கட்டமைக்க மட்டுமே தெரியும் நமக்கு, வரலாற்றுக்கு பொய்யாகவும். மிகவும் ரசிக்கத்தக்க, புத்திசாலித் தனமான எழுத்து. பிரபந்தகளின் பாதிப்பும், கம்பனின் பாதிப்பும் புத்தகம் முழுக்க பரவி இருக்கிறது. பின்னட்டையில் இருக்கும் வாசகம் கொஞ்சம் கோபத்தை வரவழைத்தது. பி.ஏ.கிருஷ்ணன் ஆழமாகவும் அகலமாகவும் பேசக் கூடியவர் என்று சுரா கூறியிருக்கிறார், ஆழமாகவும் அகலமாகவும் எழுதக் கூடியவர் என்பதற்கு இந்த புத்தகம் சான்று என எழுதியுள்ளனர். ஒவ்வொரு வாக்கியத்தையும் அனுபவித்து எழுதியுள்ளவருக்கு மொண்ணையாக எழுதப் பட்ட அறிமுகம். தந்தையின் நண்பரான பெ.நா.அப்புசாமியைப் பற்றி எழுதும் போது, ராஜாஜிக்கும் வலப்புறம் எனும்போது புன்னகையைத் தவிர்க்க முடியவில்லை. இனிமேல் வலது, இடது, புரட்சியெல்லாம் எத்தனைப் பேருக்கு புரியப் போகிறதென தெரியவில்லை. இங்கு எல்லாமே வலதை நோக்கிய பயணமாகவே இருக்கிறது.
எகிப்தைப் பற்றிய கட்டுரையை ஆராய்ச்சிக் கட்டுரை என்றே சொல்லமுடியும். ஆனால் படிக்க எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாத எழுத்து. அவர் தந்தையைப் பற்றி எழுதும் போது உண்மையிலேயே பெருமிதம் கொள்கிறார். பிடர் பிடித்து உந்த நின்ற விதியைப் பற்றி கூறும் நிகழ்ச்சி உண்மையிலேயே கம்பன் கொடுத்த சமநிலைக்கு உதாரணம். அற்புதமான கம்பன். அங்கோர் வாட் பற்றிய கட்டுரையும் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அந்தமான் செல்லுலார் சிறை மற்றும் அந்தமான் பழங்குடிகளைப் பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை.
காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. புத்தகத்தை இணையத்தில் வாங்க https://www.nhm.in/shop/100-00-0000-187-8.html
Comments