Skip to main content

லாலேட்டனும் ஆழ்வார்பேட்டை ஆண்டவரும்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் பார்த்த உணர்வு. தொய்வில்லாமல் ஒரு நல்ல திரைக்கதை. எழுத்தாளர்கள் திரையில் பளிச்சென்று தெரிய ஆரம்பித்துவிட்டனர். சுஜாதாவின் தாக்கமும் தெரிகிறது! தியேட்டர்களில் அடிக்கடி கைத்தட்டல்களும் சிரிப்புகளும். லட்சுமியும் லாலேட்டனும் பேசும் வசனங்களும் அவர்களின் உடல்மொழியும் கச்சிதமாக படமாக்கப்பட்டிருக்கிறது.

மோகன்லாலின் screen presence மிக நன்றாக இருக்கிறது. கமல் கொஞ்சம் subdued ஆக நடித்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆனால் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார். இருவரும் இறுதியில் சந்திக்கும் காட்சியில் மோகன்லாலே முன்னால் தெரிகிறார். ஒரு சாமானியனின் உடல்மொழிக்கு கமலஹாசனின் உடல்வாகும், நடையும் பொருந்தவில்லையோ என்று தோன்றுகிறது.

நல்லவேளை திரைப்படத்தில் பாடல்கள் இல்லை. படமும் 2 மணி நேரங்களில் முடிந்துவிட்டது. அல்லா ஜானே மட்டும் திரையில் பின்னணியில் கேட்க கிடைத்தது. மனுஷ்யபுத்திரனுடன் பேசியபோது தான் அந்த ஒரு பாடலை மட்டுமே எழுதியதாகவும் பாம்பே ஜெயஸ்ரீ பாடிய பாடல் கமலே எழுதியது என்றும் கூறினார். அவர் கவிதைகளைப் போலவே அல்லா ஜானே பாடலும் ஒரு நம்பிக்கை இழந்த ஜீவனின் குரலாகவே ஒலிக்கிறது.

இரா.முருகனின் இத்திரைப்படம் சார்ந்த பல கட்டுரைகளை படித்து இருந்ததால் கொஞ்சம் நிறையவே எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்புகள் இல்லாமல் செல்ல இயலவில்லை. என் நண்பன் நீ நல்ல திரைப்படம் என்று சொல்லும்போதுதான் சந்தேகமாக இருக்கிறது என்று உள்ளே போகும்போதே சொன்னான். வெளியில் வரும் போது கமல் தசாவதாரம் மாதிரி படங்களை எடுப்பதைக் காட்டிலும் இம்மாதிரி படங்களை எடுக்கலாம் என்று சொன்னான்.

Comments

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...