2008 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தில் இருந்தேன். பெங்களூரைப் போன்ற எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாத புத்தாண்டு தினம்.
ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் ஊரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டும் நாங்களே கோப்பையைக் கைப்பற்றினோம். ஐந்தாவது முறையாக இத்தொடரில் வென்று(?) கோப்பையைக் கைப்பற்றினோம். கேள்விக்குறிக்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த போட்டித்தொடர் நடந்துள்ளது. முதல் மூன்று முறை போட்டியை நடத்தும் அணி நேரடியாக அரையிறுதியில் விளையாடியது :) கடைசி இரண்டு முறை நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதை யாரும் கேட்பதுமில்லை. அனைவருக்குமே ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. தோற்பது ஜெயிப்பது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய அனைவருமே ஊரில் ஒரே சமயத்தில் இருக்கும் நாட்கள் என்பதால் இது ஒரு கூட்டு சந்திப்பு போலவே நடக்கிறது. 2009 ஆம் ஆண்டும் நடக்கும் :) கோப்பை யாருக்கென்று பார்ப்போம்.
பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி வந்தது. வாசகனாக இந்த ஆண்டின் பெரிய இழப்பென உணர்ந்த சம்பவம்.
2008 இன் முதல் ஆறு மாதம் ஹைதராபாத்திலும் மீதி சிங்கையிலும் என வாழ்க்கை. ஏறக்குறைய கடந்த எட்டு ஆண்டு காலமாக காரைக்குடி, பெங்களூர், ஹைதராபாத், பேங்காக் தற்போது சிங்கப்பூர் என ஊர் சுற்றும் உற்சாகத்துடனே இருக்கிறேன்.
இந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவல் தொடர் வாசிப்பில் ஆழ்த்திய நாவல். சென்னையின் வரலாற்றை சில தனி மனிதர்களின் வாழ்க்கையோடு படித்தது ஒரு நல்ல அனுபவம். கோபிகிருஷ்ணனின் ’உள்ளேயிருந்து சில குரல்கள்’ நாவலை இந்த ஆண்டுதான் படிக்க நேர்ந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே மிகக் கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்திய நாவல். நடைமுறை வாழ்க்கையின் பாசாங்குகளில் லயித்திருக்கும் என்னைப் போன்ற ஒருவனால் வேறெந்த எதிர்வினையாற்றவும் முடியாதென்றே நினைக்கிறேன். சுஜாதாவின் சில கணேஷ் வசந்த் நாவல்களையும் சில கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க நேர்ந்தது. ஒருவித உற்சாகமான மனநிலையை ஒவ்வொரு கட்டுரையும் கதையும் தந்தபடியே உள்ளன. ஜெயமோகனின் காடு மற்றும் சங்கச்சித்திரங்கள் ஒரு கனவுலக வாசியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.
கிழக்குப் பதிப்பகத்தின் ”விண்வெளி” மற்றும் ”இருளர்கள் - ஒர் அறிமுகம்” புத்தகம் இங்கு முன்னதாகவே வந்திருந்ததினால் அவர்களின் மொட்டை மாடி கூட்ட அறிமுகத்தின் முன்பே வாசிக்க முடிந்தது.
விண்வெளி புத்தகம் தமிழில் வெளி வந்திருக்கும் முக்கியமான அறிவியல் புத்தகம். Apogee, Perigee , geo synchronous orbit போன்ற ஏராளமானவற்றின் விளக்கங்களை இவ்வளவு எளிமையாக கூற முடியுமென்றே நினைத்திருக்கவில்லை.
”இருளர்கள் - ஓர் அறிமுகம்” என்ற புத்தகத்தை வாசிப்பது நல்ல அனுபவமே. ஆனால் ஒரு இனக்குழுவின் வரலாற்றை அறிமுகம் செய்யும் முறை இதுவல்ல என்றே தோன்றியது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவைப்படும் இத்துறையில் தகவல்கள் என்ற பெயரில் ஆசிரியர் நிறைய யூகங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார். சில ஊர்களின் பெயரைக் குறிப்பிட்டு இதில் இருந்து இங்கு முற்காலங்களில் இருளர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதற்கு பெயர்களே சான்று எனக் கூறுவது வரலாற்றாய்வாளர்களை நையாண்டி செய்யும் வேலை. புத்தக அறிமுக கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று எழுத்தாளர் யூகங்களைக் கையாளக் கூடாதா என்பது. வரலாறு என்பது யூகங்களால் ஆனதல்ல.இத்துறையின் எழுத்தாளருக்கு ஒரு துளி சமரசமும் இதில் இருக்கக் கூடாது. இத்துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் வெகுவாக இல்லாத நேரத்தில் இந்த புத்தகம் மிக முக்கியமான வரவு. ஆனால் கறாரான விமர்சனங்கள் மட்டுமே எதிர்காலத்தில் பிழைகளற்ற வரலாற்றுப் புத்தகங்கள் வர உதவும். கவிஞர் ஹரன் பிரசன்னாவின் அறிமுகம் நாளேடுகளில் திரைப்படங்களுக்கு வரும் விளம்பரம் போன்றது. மானுடவியல் பற்றி சிறு பிரக்ஞையும் அற்று எழுதப்பட்டது. கண்மணி குணசேகரனின் உழைப்பு இப்புத்தக்த்தில் வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
தமிழ் வலைதளங்களில் நாகார்ஜுனன் அவர்களின் வலைதளமும் பத்ரி அவர்களின் வலைதளமும் இந்த ஆண்டு அதிக முறை சென்று வாசித்தவை.
இந்த ஆண்டின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் காஞ்சிவரம். சொந்த ஊரைப் பற்றிய திரைப்படம் என்பதால் ஏற்பட்ட ஒரு பரவசம். காஞ்சிபுரத்தில் இன்று மிக சாதாரணமாக இருக்கும் பட்டு கூட்டுறவு சங்கங்களின் தோற்றத்துக்கு முந்தைய காலத்தின் நெசவாளிகளின் வரலாறு. திரு கே.எஸ்.பார்த்தசாரதி அவர்களால் 1949 ஆம் ஆண்டு காமாட்சி பட்டு கூட்டுறவு சங்கம் நிறுவப்பட்டது. இன்று வரை பெரிய சங்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மிக செழிப்பாக இருந்த தொழில் இன்று ஒருவித தேக்க நிலையை அடைந்து விட்டிருக்கிறது. 80 களின் இறுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் உற்பத்தி அவற்றின் உச்ச நிலையில் இருந்தது. கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மட்டுமே அவற்றிற்கான சேலையை உற்பத்தி செய்து தர முடியும். எங்கள் கிராமத்தில் காமாட்சி, அண்ணா மற்றும் முருகன் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் அதிர்ஷ்டம் வாய்க்கப் பட்டவர்களாகவே கருதப்பட்டனர். இந்த சங்கங்கள் பொங்கல் சமயத்தில் நல்ல ஊக்கத் தொகையை அளித்து வந்தன. இக்கால கட்டங்களில் பல சிறுவர்கள் பள்ளிப்படிப்பை விட்டு சேலை உற்பத்தி செய்பவர்களின் உதவிக்காக வேலைகளில் அமர்த்தப் பட்டனர். பிள்ளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொழிலைக் கற்றுக் கொண்டு பின்பு சொந்தமாக தறி போட்டு சேலை நெய்வான் என்ற நம்பிக்கையின் உந்துதல் பெற்றோர்களை தூண்டியது. ஏறக்குறைய தறி வைத்திருப்பவர்கள் அனைவரின் வீட்டிலும் சிறுவர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.
இந்த சமயத்தில் தான் இறையன்பு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியாளராக பணியில் சேர்ந்தார். குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க அவர் பல சலுகைகளை கொண்டுவந்தார். அவை வெற்றி பெறவில்லையென்றே நினைக்கிறேன். ஆனால் 96 க்கு பிறகு தொழிலின் தேக்க நிலை தொடங்கியது. சேலை உற்பத்திக்கான ஊதியம் பெற மக்கள் மிக விரைவில் சேலையை உற்பத்தி செய்தனர். முதன் முதலாக கூட்டுறவு சங்கங்களில் ஒரு சேலைக்கும் அடுத்த சேலைக்கும் உள்ள நாட்கணக்கை அதிகப் படுத்தின. இது மிகப்பெரிய அளவில் நெசவாளர்களை பாதித்தது. விலை உயர்ந்த சேலைக்கான உற்பத்தி ஊதியம் சாதாரண சேலையின் உற்பத்தி ஊதியத்தை விட அதிகம். அதனால் ஏறக்குறைய எல்லோருக்கும் சாதாரண சேலை உற்பத்தி வேலையே கொடுத்தனர். திடிரென மொத்த தொழிலும் முடங்கிய நிலை. இதற்கு பிறகு சிறுவர்கள் வேலையிலிருந்து ஏறக்குறைய மொத்தமாக நிறுத்தப்பட்டனர். மாதத்தில் பாதி நாட்கள் நெசவாளர்கள் வேலையில்லாமல் இருக்க ஆரம்பித்தனர். பொங்கல் ஊக்கத் தொகை மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி ரோடில் உண்வகங்கள் நெசவாளர்களை நம்பியே இயங்கி வந்தன. அவற்றில் சில மூடப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தொழில் சீரடைந்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியில் காட்டிய கவனம் விற்பனையில் காட்டப்படாதது ஒரு காரணமாக இருந்தது. தற்போது விற்பனையிலும் அவர்கள் கவனம் கூடி இருக்கிறது என்றே தோன்றுகிறது.காஞ்சிபுரத்தின் மிக முக்கியமான அடையாளமாக பட்டுசேலை நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. இத்தொழில் வளருமென்று எல்லோரையும் போல என் ஆசையும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஆண்டுதோறும் பொங்கல் சமயத்தில் ஊரில் நடக்கும் கிரிக்கெட் தொடரில் இந்த ஆண்டும் நாங்களே கோப்பையைக் கைப்பற்றினோம். ஐந்தாவது முறையாக இத்தொடரில் வென்று(?) கோப்பையைக் கைப்பற்றினோம். கேள்விக்குறிக்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை ஐந்து முறை இந்த போட்டித்தொடர் நடந்துள்ளது. முதல் மூன்று முறை போட்டியை நடத்தும் அணி நேரடியாக அரையிறுதியில் விளையாடியது :) கடைசி இரண்டு முறை நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடியது. இதை யாரும் கேட்பதுமில்லை. அனைவருக்குமே ஒரு போட்டியிலாவது விளையாட வேண்டுமென்ற ஆசை மட்டுமே உள்ளது. தோற்பது ஜெயிப்பது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை. ஏறக்குறைய அனைவருமே ஊரில் ஒரே சமயத்தில் இருக்கும் நாட்கள் என்பதால் இது ஒரு கூட்டு சந்திப்பு போலவே நடக்கிறது. 2009 ஆம் ஆண்டும் நடக்கும் :) கோப்பை யாருக்கென்று பார்ப்போம்.
பிப்ரவரி மாதத்தின் ஒரு இரவு நேரத்தில் எழுத்தாளர் சுஜாதா மறைந்த செய்தி வந்தது. வாசகனாக இந்த ஆண்டின் பெரிய இழப்பென உணர்ந்த சம்பவம்.
2008 இன் முதல் ஆறு மாதம் ஹைதராபாத்திலும் மீதி சிங்கையிலும் என வாழ்க்கை. ஏறக்குறைய கடந்த எட்டு ஆண்டு காலமாக காரைக்குடி, பெங்களூர், ஹைதராபாத், பேங்காக் தற்போது சிங்கப்பூர் என ஊர் சுற்றும் உற்சாகத்துடனே இருக்கிறேன்.
இந்த ஆண்டு பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவல் தொடர் வாசிப்பில் ஆழ்த்திய நாவல். சென்னையின் வரலாற்றை சில தனி மனிதர்களின் வாழ்க்கையோடு படித்தது ஒரு நல்ல அனுபவம். கோபிகிருஷ்ணனின் ’உள்ளேயிருந்து சில குரல்கள்’ நாவலை இந்த ஆண்டுதான் படிக்க நேர்ந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே மிகக் கடுமையான மனச்சோர்வை ஏற்படுத்திய நாவல். நடைமுறை வாழ்க்கையின் பாசாங்குகளில் லயித்திருக்கும் என்னைப் போன்ற ஒருவனால் வேறெந்த எதிர்வினையாற்றவும் முடியாதென்றே நினைக்கிறேன். சுஜாதாவின் சில கணேஷ் வசந்த் நாவல்களையும் சில கட்டுரைத் தொகுப்பையும் வாசிக்க நேர்ந்தது. ஒருவித உற்சாகமான மனநிலையை ஒவ்வொரு கட்டுரையும் கதையும் தந்தபடியே உள்ளன. ஜெயமோகனின் காடு மற்றும் சங்கச்சித்திரங்கள் ஒரு கனவுலக வாசியை நினைவுபடுத்திக் கொண்டே இருந்தன.
கிழக்குப் பதிப்பகத்தின் ”விண்வெளி” மற்றும் ”இருளர்கள் - ஒர் அறிமுகம்” புத்தகம் இங்கு முன்னதாகவே வந்திருந்ததினால் அவர்களின் மொட்டை மாடி கூட்ட அறிமுகத்தின் முன்பே வாசிக்க முடிந்தது.
விண்வெளி புத்தகம் தமிழில் வெளி வந்திருக்கும் முக்கியமான அறிவியல் புத்தகம். Apogee, Perigee , geo synchronous orbit போன்ற ஏராளமானவற்றின் விளக்கங்களை இவ்வளவு எளிமையாக கூற முடியுமென்றே நினைத்திருக்கவில்லை.
”இருளர்கள் - ஓர் அறிமுகம்” என்ற புத்தகத்தை வாசிப்பது நல்ல அனுபவமே. ஆனால் ஒரு இனக்குழுவின் வரலாற்றை அறிமுகம் செய்யும் முறை இதுவல்ல என்றே தோன்றியது. அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் தேவைப்படும் இத்துறையில் தகவல்கள் என்ற பெயரில் ஆசிரியர் நிறைய யூகங்களை உபயோகப்படுத்தியிருக்கிறார். சில ஊர்களின் பெயரைக் குறிப்பிட்டு இதில் இருந்து இங்கு முற்காலங்களில் இருளர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதற்கு பெயர்களே சான்று எனக் கூறுவது வரலாற்றாய்வாளர்களை நையாண்டி செய்யும் வேலை. புத்தக அறிமுக கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று எழுத்தாளர் யூகங்களைக் கையாளக் கூடாதா என்பது. வரலாறு என்பது யூகங்களால் ஆனதல்ல.இத்துறையின் எழுத்தாளருக்கு ஒரு துளி சமரசமும் இதில் இருக்கக் கூடாது. இத்துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் வெகுவாக இல்லாத நேரத்தில் இந்த புத்தகம் மிக முக்கியமான வரவு. ஆனால் கறாரான விமர்சனங்கள் மட்டுமே எதிர்காலத்தில் பிழைகளற்ற வரலாற்றுப் புத்தகங்கள் வர உதவும். கவிஞர் ஹரன் பிரசன்னாவின் அறிமுகம் நாளேடுகளில் திரைப்படங்களுக்கு வரும் விளம்பரம் போன்றது. மானுடவியல் பற்றி சிறு பிரக்ஞையும் அற்று எழுதப்பட்டது. கண்மணி குணசேகரனின் உழைப்பு இப்புத்தக்த்தில் வெளிப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
தமிழ் வலைதளங்களில் நாகார்ஜுனன் அவர்களின் வலைதளமும் பத்ரி அவர்களின் வலைதளமும் இந்த ஆண்டு அதிக முறை சென்று வாசித்தவை.
இந்த ஆண்டின் கவனத்தை ஈர்த்த திரைப்படம் காஞ்சிவரம். சொந்த ஊரைப் பற்றிய திரைப்படம் என்பதால் ஏற்பட்ட ஒரு பரவசம். காஞ்சிபுரத்தில் இன்று மிக சாதாரணமாக இருக்கும் பட்டு கூட்டுறவு சங்கங்களின் தோற்றத்துக்கு முந்தைய காலத்தின் நெசவாளிகளின் வரலாறு. திரு கே.எஸ்.பார்த்தசாரதி அவர்களால் 1949 ஆம் ஆண்டு காமாட்சி பட்டு கூட்டுறவு சங்கம் நிறுவப்பட்டது. இன்று வரை பெரிய சங்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மிக செழிப்பாக இருந்த தொழில் இன்று ஒருவித தேக்க நிலையை அடைந்து விட்டிருக்கிறது. 80 களின் இறுதியிலும் 90 களின் ஆரம்பத்திலும் காஞ்சிபுரம் பட்டு சேலைகளின் உற்பத்தி அவற்றின் உச்ச நிலையில் இருந்தது. கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மட்டுமே அவற்றிற்கான சேலையை உற்பத்தி செய்து தர முடியும். எங்கள் கிராமத்தில் காமாட்சி, அண்ணா மற்றும் முருகன் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் அதிர்ஷ்டம் வாய்க்கப் பட்டவர்களாகவே கருதப்பட்டனர். இந்த சங்கங்கள் பொங்கல் சமயத்தில் நல்ல ஊக்கத் தொகையை அளித்து வந்தன. இக்கால கட்டங்களில் பல சிறுவர்கள் பள்ளிப்படிப்பை விட்டு சேலை உற்பத்தி செய்பவர்களின் உதவிக்காக வேலைகளில் அமர்த்தப் பட்டனர். பிள்ளை ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொழிலைக் கற்றுக் கொண்டு பின்பு சொந்தமாக தறி போட்டு சேலை நெய்வான் என்ற நம்பிக்கையின் உந்துதல் பெற்றோர்களை தூண்டியது. ஏறக்குறைய தறி வைத்திருப்பவர்கள் அனைவரின் வீட்டிலும் சிறுவர்கள் வேலைக்கு சேர்ந்தனர்.
இந்த சமயத்தில் தான் இறையன்பு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆட்சியாளராக பணியில் சேர்ந்தார். குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க அவர் பல சலுகைகளை கொண்டுவந்தார். அவை வெற்றி பெறவில்லையென்றே நினைக்கிறேன். ஆனால் 96 க்கு பிறகு தொழிலின் தேக்க நிலை தொடங்கியது. சேலை உற்பத்திக்கான ஊதியம் பெற மக்கள் மிக விரைவில் சேலையை உற்பத்தி செய்தனர். முதன் முதலாக கூட்டுறவு சங்கங்களில் ஒரு சேலைக்கும் அடுத்த சேலைக்கும் உள்ள நாட்கணக்கை அதிகப் படுத்தின. இது மிகப்பெரிய அளவில் நெசவாளர்களை பாதித்தது. விலை உயர்ந்த சேலைக்கான உற்பத்தி ஊதியம் சாதாரண சேலையின் உற்பத்தி ஊதியத்தை விட அதிகம். அதனால் ஏறக்குறைய எல்லோருக்கும் சாதாரண சேலை உற்பத்தி வேலையே கொடுத்தனர். திடிரென மொத்த தொழிலும் முடங்கிய நிலை. இதற்கு பிறகு சிறுவர்கள் வேலையிலிருந்து ஏறக்குறைய மொத்தமாக நிறுத்தப்பட்டனர். மாதத்தில் பாதி நாட்கள் நெசவாளர்கள் வேலையில்லாமல் இருக்க ஆரம்பித்தனர். பொங்கல் ஊக்கத் தொகை மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. காஞ்சிபுரம் காந்தி ரோடில் உண்வகங்கள் நெசவாளர்களை நம்பியே இயங்கி வந்தன. அவற்றில் சில மூடப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகாலமாக தொழில் சீரடைந்து வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தியில் காட்டிய கவனம் விற்பனையில் காட்டப்படாதது ஒரு காரணமாக இருந்தது. தற்போது விற்பனையிலும் அவர்கள் கவனம் கூடி இருக்கிறது என்றே தோன்றுகிறது.காஞ்சிபுரத்தின் மிக முக்கியமான அடையாளமாக பட்டுசேலை நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றன. இத்தொழில் வளருமென்று எல்லோரையும் போல என் ஆசையும்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Comments