Skip to main content

சிறுதெய்வ வழிபாடும் அவற்றின் வரலாறுகளூம்

சிங்கை தேசிய நூலகத்திலிருந்து குறுஞ்சாமிகளின் கதைகள் புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்கக் கொண்டுவந்தேன். கழனியூரன் தொகுத்து உயிர்மை வெளீயிட்டு இருக்கும் இந்த நூலில் தென் தமிழகத்தின் பல குறுஞ்சாமிகளின் செவிவழி வரலாற்றைத் தொகுத்துள்ளார்.

"காதல் தோல்வி, தியாக வரலாறு, கலப்பு மணம் என்பன போன்ற உண்ர்ச்சிக் கொ ந்தளிப்பான கதையாடல்கள், இக்குறுஞ்சாமிகளின் பின்னணியில் உள்ளன" என்று தன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அவர் தொகுத்துள்ள 23 கதைகளும் இதையே வெளிப்படுத்துகின்றன.

புத்தகத்தின் முடிவில் கழனியூரன் ஒரு முக்கியமானக் கோரிக்கையை முன்வைக்கிறார்.
"பாரததேசம் எங்கும் நிலவும் இத்தகைய நாட்டுப்புற தெய்வங்களின் வரலாறுகள் தொகுக்கப் பட வேண்டும்"
இதை யாரேனும் முன்னெடுத்துச் செல்வார்களா என்று தெரியவில்லை.

தமிழ் நாட்டின் நிறைய கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு நடைமுறையில் இருந்தாலும் அவற்றின் வரலாறு அறிய முடியாததாகவோ இல்லை சானறுகள் இல்லாததாகவோ இருக்கிறது. மேலும் மாரியம்மன் என்ற வழிபாட்டு சிறுதெய்வம் ஏறக்குறைய எல்லா ஊர்களிலும் இருக்கிறது. ஆனால் அவற்றின் வரலாறுகள் பெரும்பாலும் வெவ்வேறாகவே இருக்கின்றன.

இந்த புத்தகத்தை வாசிக்கையில் எழுத்தாளர் மணா அவர்கள் தொகுத்திருந்த "தமிழ் மண்ணின் சாமிகள்" என்ற புத்தகம் நினைவுக்கு வந்தது. அவரும் தமிழ் நாட்டு சிறு தெய்வ வழிபாடுகளைப் பற்றிய (செவிவழி) வரலாற்று செய்திகளைத் தொகுத்தளித்திருந்தார்.

அப்போதே எங்கள் கிராமத்தில் இருக்கும் சில சிறுதெய்வ வழிபாடுகளைப் பற்றி எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். தற்போது அதைப் பற்றி சிறிது எழுதலாமென்று தோன்றுகிறது. கழனியூரன் சிறு தெய்வங்கள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் இருந்து பிற்காலத்தில் செங்கற்களாலும் பின் காரைகளாலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன என்கிறார்.

எங்க‌ள் கிராம‌த்தில் உள்ள‌ சிறு தெய்வ‌ கோயில்க‌ளில் ப‌ட‌வேட்ட‌ம்ம‌ன் கோயிலில் அம்ம‌ன் ம‌ட்டும் ந‌னையாம‌ல் இருப்ப‌த‌ற்கான் சிறு ஏற்பாடு உள்ளது. அதைத் த‌விர‌ சுற்றுச் சுவ‌ர் ம‌ட்டுமே உள்ளது. இது அவ‌ர் குறிப்பிடுவ‌து போல‌ ஊரின் விளிம்புநிலை ம‌க்க‌ளால் வணங்கப்ப‌டும் தெய்வ‌ம். இது அவ்வகையில் ஒரு இன‌க்குழுவைச் சார்ந்த‌ ஜாதிய சிறு தெய்வ‌மாக‌வே உள்ள‌து.

க‌ன்னிய‌ம்ம‌ன் என்ற‌ சிறுதெய்வ‌த்திற்கு கூரையும் கிடையாது சுற்றுச் சுவ‌ரும் கிடையாது. இத்தெய‌வ‌த்திற்கு வ‌ழிபாடும் ஏதும் ந‌ட‌ப்ப‌தில்லை. 130 ஏக்க‌ர் ப‌ர‌ப்ப‌ள‌வில் விரிந்து கிட‌க்கும் குள‌த்தின் ஒரு மூலையில் புதர்கள் மண்டிக் கிடக்கும் இடத்தில் அமைந்துள்ள‌ அம்ம‌ன் மிக‌வும் அச்ச‌மூட்டும் தெய்வ‌மாக‌வே சித்த‌ரிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.

பொன்னிய‌ம்ம‌ன் ம‌ற்றும் க‌ங்கைய‌ம்ம‌ன் போன்ற‌ சிறு தெய்வ‌ங்க‌ளுக்கு கூரை அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌துட‌ன் ஆண்டுதோறும் திருவிழாவும் ந‌டைபெற்று வ‌ருகிற‌து. இதில் பொன்னிய‌ம்ம‌ன் ஊரின் வள‌ம் சார்ந்த‌ சிறு தெய்வ‌மாக‌க் க‌ருத‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. ம‌ழை வேண்டி இந்த‌ அம்ம‌னுக்கு கொடைகள்(திருவிழா) எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. நாக்கில் சூல‌ம் குத்துத‌ல், உட‌ம்பில் எலுமிச்சைப் ப‌ழ‌ங்க‌ளைக் குத்துத‌ல், முதுகுச் ச‌தைக‌ளைக் கொக்கிகளால் துளைத்து மறுமுனையைக் கயிற்றில் கட்டி பறந்து சென்று அம்மனுக்கு மாலை அணிவித்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் திருவிழாவின் போது நிறைவேற்றப் படுகின்றன. ஆனால் இச்சிறுதெய்வ‌ங்க‌ளின் வ‌ர‌லாறு ப‌ற்றி எவ‌ரேனும் சிந்தித்திருப்பாரா என்று தெரிய‌வில்லை.

இதை விட‌ குடும்ப‌ குல‌தெய்வ‌ வ‌ழிபாடும் வ‌ர‌லாற்றைப் ப‌ற்றித் தெரியாத‌தாக‌வே உள்ள‌து. எங்க‌ள் குடும்ப‌த்தின் குல‌தெய்வ‌ம் காஞ்சிபுர‌ம் வ‌ந்த‌வாசி சாலையில் இருந்து மானாம்ப‌தி எனும் சிற்றூர் வ‌ழியே 2 கிமீ ம‌ண் பாதையில் சென்றால் வ‌ரும். தெய்வ‌த்தின் பெய‌ர் ப‌ச்சைய‌ம்மாள். அக்கிராம‌த்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் அம்ம‌ன் சுமார் 35 கிமீ தள்ளி இருக்கும் ஒரு குடும்ப‌த்திற்கு குல‌ தெய்வ‌மாக‌ இருக்கும் க‌தை க‌ண்டிப்பாக‌ சுவார‌சிய‌மான‌ ஒன்றாக‌ இருக்கும். ஆனால் அதைப் ப‌ற்றி எவ‌ருக்கேனும் ஒரு சிறு விவ‌ர‌ம் கூட‌த் தெரியாம‌லிருப்ப‌து விய‌ப்புக்குரிய‌ ஒன்றாக‌ இல்லை.

இக்கால‌த்தில் அவ‌ற்றைக் கண்டிப்பாக‌ பதிவு செய்ய‌ வேண்டியிருப்பினும் அத‌ற்கான சாத்திய‌ம் கேள்விக்குறியே. க‌ண்டிப்பாக‌ க‌ழ‌னியூர‌னின் இத்தொகுப்பு ச‌ம‌கால மானுட‌விய‌ல், நாட்டாரிய‌ல் ம‌ற்றும் ப‌ண்பாட்டியிய‌ல் சார்ந்த‌ முக்கிய‌மான ஆவ‌ண‌மாக‌த் திக‌ழும்.

Comments

அட! சிங்கையில் இருந்தா??
வாங்க வாங்க.
Mukkiyama vishayam ithu, neenga solrathu pola niraiya perukku kula theivangaloda poorveega kathaigal theriyathu.Athu alivin vilimbu nilai la thaan irukku, yeanna antha kathaigala namakku solla koodia periyavargal romba silar thaan irukanga. Unga oor theivangal paththi solli irukeengale antha paguthi la innum konjam ethirparthen. Palaral eduththu pesa padatha vishayam, nalla oru pathivu.

Popular posts from this blog

கண்ணீரில்லாமல்..

இரவு 10.40 மணிக்கு நண்பர் வா.மணிகண்டனுக்கு SMS ஒன்று வந்தது. எழுத்தாளர் சுஜாதா காலமானார் என்று. அவரை எப்படியும் ஒரு முறைப் பார்த்துவிட வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே போகுமென்று நினைக்கவில்லை. இந்த ஆண்டு சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியில் உயிர்மையில் சில நாட்கள் இருந்தோம். பொங்கல் அன்று மட்டுமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கிளம்பி விட்டேன். மணி என்னை பொங்கல் அன்று தொடர்பு கொண்டு புத்தகத்தை சுஜாதா வெளியிடப் போகிறார் என்றும் கட்டாயம் வாங்க என்றும் அழைத்தார். என்னுடைய CAMERA வை மட்டும் மணியிடம் கொடுத்துவிட்டு வ‌ந்துவிட்டேன்.ஒரு நல்ல எழுத்தாளரை சந்திக்கும் வாய்ப்பை மிக‌ எளிதாக இழந்துவிட்டேன். இம்முறை உயிர்மையில் சுஜாதாவின் பல புத்தகங்கள் மறுபதிப்பாகவும் தொகுப்புகளாகவும் புதியதாகவும் வந்திருந்தன. ஒரு எழுத்தாளராக அவர் தமிழ் வாசகர்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கிறார் என்பதை நேரில் பார்த்து அறிய முடிந்தது. அவரது அறிவியல் சிறுகதைகள் தொகுப்பில் வரும் "ஒரு கதையில் இரு கிளைக் கதைகள்" என்ற சிறுகதையில் வரலாற்று ஆய்வு செய்யும் ஒருவனின் கதாபாத்திர‌த்தில் என்னைப் பல முறை ...

சின்னச் சின்ன ஞானங்கள்

2021ம் புத்தாண்டையொட்டி நடந்த கல்லெழும் விதை நிகழ்ச்சியில் திரு. யூமா வாசுகி அவர்களின் உரையைக் (https://youtu.be/iGfyPXj5HrE) கேட்டபின் தான் இந்த சின்னச் சின்ன ஞானங்கள் என்ற புத்தகத்தை படிக்கும் எண்ணம் வந்தது. குரு நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் எழுதிய இத்திரிகார்யம் என்ற நூலின் மொழியாக்கம் தான் சின்னச் சின்ன ஞானங்கள். குழந்தைகள் புத்தகம் எழுதுபவர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக குரு நித்யா முன்னுரையில் குறிப்பிடுகிறார். தன்னறம் நூல்வெளியின் பதிப்புரையும் மிக அழகான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. குரு நித்யாவின் சில மேற்கோள்களையும் இந்த நூல் வெளிவந்ததன் பின்னணி பற்றியும் அழகாக எழுதியுள்ளனர். 17 அத்தியாயங்கள் கொண்ட இந்த புத்தகத்தை யூமா வாசுகி மிக அழகாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அத்தியாயங்களின் தலைப்பு முதற்கொண்டு கட்டுரைகளும் இனிமையான மொழிநடையில் உள்ளன.  குரு நித்யாவின் குழந்தைகளுடனான நேரடி உரையாடல்கள், விளையாட்டுகள் மூலமாகவும் பெரியவர்களின் மூலமாகவும் குழந்தைகளின் அற்புத உலகத்தை புரிய வைக்க முயல்கிறார். தத்துவத்தில் கனிந்த குருவின் அழக...

சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா

கடந்த மார்ச் 1 ஆம் தேதி சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் 25வது ஆண்டுவிழா உட்லாண்ஸ் நூலகத்தில் நடைபெற்றது. வாசகர் வட்டக் கூட்டத்திற்கு ஒருமுறை மட்டும் சென்றிருக்கிறேன். ஜெயமோகன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் என்பதால் விழாவிற்கு சென்றிருந்தேன். மார்ச் 1ஆம் தேதி அவரின் சிறப்புரையும் மறுநாள் ஆங் மோ க்யோ நூலகத்தில் அவருடன் கலந்துரையாடலும் ஏற்பாடாகியிருந்தது. எழுத்தாளர் ராம கண்ணபிரான் வாசகர் வட்டத்தின் தொடக்கத்தைப் பற்றியும் 25 ஆண்டு வளர்ச்சியைப் பற்றியும் உரையாற்றினார். ஜெயமோகனின் உரை புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதில் உள்ள பதற்றம், தமிழ் நூல்களை வாசிக்கும் முறை, சூழியல் (Ecology) துறையில் தியடோர் பாஸ்கரனின் பங்களிப்பு எனக் கலந்திருந்தது. திருக்குறளுக்கு உரை எழுதப்போவதாக ஜெயமோகன் கூறினார். ஆனால் ஏற்கனவே இருக்கும் உரைகள் போல இரண்டு வரி உரையோ அல்லது சுஜாதாவின் அறிவுஜீவித் தனமான ஒருவரி உரையோ அவரின் நோக்கமல்ல என சில குறள்களின் உதாரணங்களோடு விளக்கினார். குறள்களைச் சூத்திரமாகக் கருத வேண்டுமெனவும் உரை என்பது சூத்திரத்தின் அனைத்து பொருள்களையும் விளக...