எங்க வீட்டில எல்லாம் ஒரு நாளைக்கு சாதரணமா அஞ்சு தடவ எல்லாம் காப்பிக் குடிக்கலாம்.அதுவும் மாசி மகம், நடவா திருவிழான்னா கேட்கவே வாணாம்.ஊர்ல இருந்து சொந்த காரங்க batch batch ஆ தான் வருவாங்க. எங்கம்மா ஒவ்வொரு முறையும் அடுப்பங்கரைக்கு போய் காப்பியப் போட ஆரம்புச்சுடுவாங்க.நாம அப்படியே வந்துருக்கிறவங்களுக்கு கொடுக்கும் போது கூட ஒன்னு வாங்கிக்கலாம். நாக்கு எந்நேரமும் தெகட்டிட்டே இருந்தாலும் அத பத்தியெல்லாம் நாங்க கவலைப்படறுதுல்ல.சில சமயம் ஏன் இந்த கச்சபேஸ்வரரும் கரி வரதரும் வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் வராங்கன்னு தோணும்.
இதுல என்ன பெரிய விஷயம்னா ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் ஒரு 90% சொந்தக்காரங்க காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், ஐயம்பேட்டை(காஞ்சிபுரம் பக்கத்திலயும் ஒன்னு இருக்குது) தான்.இப்ப தக்கோலம் (பொன்னியின் செல்வன்ல வர இராஜாதித்தர் போர் புரிந்த இடம் தாங்கோ) பக்கமும் பொன்னு கொடுத்து பொன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.மெட்ராஸ்ல எல்லாம் சொந்தகாரங்க தெருக்கு ஒன்னு கூட தேறாது. இவங்க எல்லார் வீட்லயும் காப்பி கதை இத விடப் பெரிய கதை. எங்க அண்ணன் எங்க அம்மாட்ட காப்பி கேட்டுக்கேட்டே குடிப்பார்.எங்களுக்கு சோறு இருக்குதோ இல்லையோ காப்பி கண்டிப்பா இருக்கணும்.
இந்த காப்பி எல்லாம் BRU காப்பி கெடயாது.காஞ்சிபுரம் மூங்கில் மண்டபத்துல இருக்கிற வசந்தா காபி கடையில இருந்து வாங்கி வரதுதான்.இதுவும் ஒரு மாதிரி நரசுஸ் தான். எப்பப்ப எல்லாம் பட்டு சேலை அறுக்கிறாங்களோ அப்ப எல்லாம் ஒரு 100 கிராமோ 200 கிராமோ அங்க இருந்து வாங்கின்னு வந்துடுவாங்க.பட்டு சேலை அறுக்கிறதுன்னா தறியில இருந்து முழுசா நெஞ்சி முடிஞ்ச பிறகு பிரிச்சு எடுக்கிறதுதான்.அப்படி எடுத்த சேலைய மடிக்கிறது ஒரு பெரிய கலை.விஜய் டிவில இருந்து ஜில்லுன்னு ஒரு சேலஞ்ல சேலை மடிக்கிறத ஒரு போட்டியா வச்சி எங்க ஊருக்கு வந்து சேலைய நாசம் பண்ணிட்டு போனாங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி.காப்பிக் குடிக்க வச்சிருக்கிற டம்ளர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கும். எங்க வீட்டுல அண்டா டம்ளர்ன்னே ஒன்னு இருக்குனா பார்த்துக்குங்க.
பில்டர் எல்லாம் அடிக்கடி எடுக்க மாட்டாங்க. அது நம்ம GOAL கதையில வர bottleneck மாதிரி. நாம குடிக்கிற அளவுக்கு தேவையான டிகாஷன் அவ்ளோ சீக்கிரமா பில்டரால தர முடியாது.அதுக்கெல்லாம் எங்க வீட்ல அசர மாட்டாங்க.தோராயமா சூப்பரா பில்டர் பண்ணுவாங்க. என்ன கடைசியில டம்ளர்ல அடியில கொஞ்சம் கசடு இருக்கும். அதப்பத்தியெல்லாம் நாங்க கவல படறதில்லன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல.ஆனா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மைக்ரைன் (migraine) அப்படின்னு ஒரு நண்பர் வந்தார்.இனிமேல் காப்பி எல்லாம் குடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.அதனால இந்த விஷயங்களெல்லாம் அனுபவங்களா மட்டும்தான் இருக்கு.அதுமட்டுமில்லாம இப்ப எல்லாம் எங்க வீட்டுல எல்லாம் BRU, NESCAFE தான்.
சில வீட்ல மட்டும் இன்னும் இந்த காப்பி இருக்கு. எங்க பெரியம்மா வீட்ல மட்டும் இன்னும் இத விடாம இருக்காங்க. அங்க போனா மட்டும் காப்பிய விடாம குடிச்சுட்டு வந்துடுவேன்.
இதுல என்ன பெரிய விஷயம்னா ஊர்ல இருக்கிற எல்லாருக்கும் ஒரு 90% சொந்தக்காரங்க காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், ஐயம்பேட்டை(காஞ்சிபுரம் பக்கத்திலயும் ஒன்னு இருக்குது) தான்.இப்ப தக்கோலம் (பொன்னியின் செல்வன்ல வர இராஜாதித்தர் போர் புரிந்த இடம் தாங்கோ) பக்கமும் பொன்னு கொடுத்து பொன்னு எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.மெட்ராஸ்ல எல்லாம் சொந்தகாரங்க தெருக்கு ஒன்னு கூட தேறாது. இவங்க எல்லார் வீட்லயும் காப்பி கதை இத விடப் பெரிய கதை. எங்க அண்ணன் எங்க அம்மாட்ட காப்பி கேட்டுக்கேட்டே குடிப்பார்.எங்களுக்கு சோறு இருக்குதோ இல்லையோ காப்பி கண்டிப்பா இருக்கணும்.
இந்த காப்பி எல்லாம் BRU காப்பி கெடயாது.காஞ்சிபுரம் மூங்கில் மண்டபத்துல இருக்கிற வசந்தா காபி கடையில இருந்து வாங்கி வரதுதான்.இதுவும் ஒரு மாதிரி நரசுஸ் தான். எப்பப்ப எல்லாம் பட்டு சேலை அறுக்கிறாங்களோ அப்ப எல்லாம் ஒரு 100 கிராமோ 200 கிராமோ அங்க இருந்து வாங்கின்னு வந்துடுவாங்க.பட்டு சேலை அறுக்கிறதுன்னா தறியில இருந்து முழுசா நெஞ்சி முடிஞ்ச பிறகு பிரிச்சு எடுக்கிறதுதான்.அப்படி எடுத்த சேலைய மடிக்கிறது ஒரு பெரிய கலை.விஜய் டிவில இருந்து ஜில்லுன்னு ஒரு சேலஞ்ல சேலை மடிக்கிறத ஒரு போட்டியா வச்சி எங்க ஊருக்கு வந்து சேலைய நாசம் பண்ணிட்டு போனாங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி.காப்பிக் குடிக்க வச்சிருக்கிற டம்ளர் எல்லாம் ஒரு மார்க்கமா இருக்கும். எங்க வீட்டுல அண்டா டம்ளர்ன்னே ஒன்னு இருக்குனா பார்த்துக்குங்க.
பில்டர் எல்லாம் அடிக்கடி எடுக்க மாட்டாங்க. அது நம்ம GOAL கதையில வர bottleneck மாதிரி. நாம குடிக்கிற அளவுக்கு தேவையான டிகாஷன் அவ்ளோ சீக்கிரமா பில்டரால தர முடியாது.அதுக்கெல்லாம் எங்க வீட்ல அசர மாட்டாங்க.தோராயமா சூப்பரா பில்டர் பண்ணுவாங்க. என்ன கடைசியில டம்ளர்ல அடியில கொஞ்சம் கசடு இருக்கும். அதப்பத்தியெல்லாம் நாங்க கவல படறதில்லன்னு நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனும்னு இல்ல.ஆனா ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மைக்ரைன் (migraine) அப்படின்னு ஒரு நண்பர் வந்தார்.இனிமேல் காப்பி எல்லாம் குடிக்கக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டார்.அதனால இந்த விஷயங்களெல்லாம் அனுபவங்களா மட்டும்தான் இருக்கு.அதுமட்டுமில்லாம இப்ப எல்லாம் எங்க வீட்டுல எல்லாம் BRU, NESCAFE தான்.
சில வீட்ல மட்டும் இன்னும் இந்த காப்பி இருக்கு. எங்க பெரியம்மா வீட்ல மட்டும் இன்னும் இத விடாம இருக்காங்க. அங்க போனா மட்டும் காப்பிய விடாம குடிச்சுட்டு வந்துடுவேன்.
Comments
என்ன பண்றது..எங்க வீட்ல அப்ப பசு இருந்தது.இப்ப அத யார் பாத்துக்கிறத்னு கேட்கறாங்க..