எல்லோரும் அவங்களுடைய புத்தகக் கண்காட்சியைப் பத்தி எழுதிட்டாங்க.நாமும் கொஞ்சம் எழுதுவோமே.12.45 PM க்கு என்னோட முதல் புத்தகக் கண்காட்சிக்கு நுழையறேன்.முதலில் விகடனுக்கு தான் போனேன்.தேசாந்திரி மற்றும் வெற்றிக்கு ஏழு படிகள் இரண்டையும் எடுத்தாச்சு.அடுத்தது கிழக்கு தான்.உள்ள நுழையும் போதே பாலபாரதியைப் பார்த்தேன்.கொஞ்ச நேரம் கழித்து நானே போய் அவர்ட்ட நானே அறிமுகம் பண்ணிகிட்டேன்(வேற என்னத்த பண்றது...)அங்க இருந்து மு.க வையும் குருதிப்புனலையும் அள்ளிக்கிட்டேன்.பாவம் சில்லரை இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டாங்க கிழக்கில.அடுத்த முறை பத்ரி அதை சரி செய்துடுவார்னு(??) நினைக்கிறேன்.
பிறகு காலச்சுவடு,உயிர்மை,மணிமேகலை,நர்மதா,வானதி,கண்ணதாசன்,
குமுதம்.. நிறைய கடைக்குப் போய் கொஞ்சம் தான் வாங்கினேன்.எங்கம்மா 500 ரூ மேல வாங்காதடான்னு சொல்லி விட்டு இருந்தங்க.பார்த்தா 1200 ரூ மேல பில் இருக்கு ஆனா புத்தகங்கள் ரொம்பக் குறைவா இருக்க மாதிரி தான் இருந்தது.மணியும் 2.30 ஆயிடுச்சி.அங்க என்னடானனா சுத்தி சுத்தி விடறாங்க.2.45 க்கு வெளியே வ்ந்தாச்சு.சரி வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுப்போம்னு உள்ள் நுழைஞ்சி ஒரு தயிர் சாதம் வாங்கினா அது சுட்ட சூட்டுல 30 நிமிடம் அது கூட சண்டைப் போட வேண்டியதாப் போச்சு.
கடைசியா கொஞ்சம் புத்தகம் கையில் இருந்தது.
தேசாந்திரி - எஸ்.இராமகிருஷ்ணன்
வெற்றிக்கு ஏழு படிகள் - சீனிவாசன்
மு.க - ஜெ.ராம்கி
குருதிப்புனல் - இ.பா
ஜெ.ஜெ சில குறிப்புகள் - சு.ரா
கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
வெற்றி நிச்சயம்,சொன்னார்கள் சொன்னார்கள் - சுகி.சிவம்
வாழ்க்கையே ஒரு வழிபாடு - இறையன்பு
பார்த்திபன் கனவு - கல்கி
இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா
பிறகு காலச்சுவடு,உயிர்மை,மணிமேகலை,நர்மதா,வானதி,கண்ணதாசன்,
குமுதம்.. நிறைய கடைக்குப் போய் கொஞ்சம் தான் வாங்கினேன்.எங்கம்மா 500 ரூ மேல வாங்காதடான்னு சொல்லி விட்டு இருந்தங்க.பார்த்தா 1200 ரூ மேல பில் இருக்கு ஆனா புத்தகங்கள் ரொம்பக் குறைவா இருக்க மாதிரி தான் இருந்தது.மணியும் 2.30 ஆயிடுச்சி.அங்க என்னடானனா சுத்தி சுத்தி விடறாங்க.2.45 க்கு வெளியே வ்ந்தாச்சு.சரி வயிற்றுக்கும் கொஞ்சம் கொடுப்போம்னு உள்ள் நுழைஞ்சி ஒரு தயிர் சாதம் வாங்கினா அது சுட்ட சூட்டுல 30 நிமிடம் அது கூட சண்டைப் போட வேண்டியதாப் போச்சு.
கடைசியா கொஞ்சம் புத்தகம் கையில் இருந்தது.
தேசாந்திரி - எஸ்.இராமகிருஷ்ணன்
வெற்றிக்கு ஏழு படிகள் - சீனிவாசன்
மு.க - ஜெ.ராம்கி
குருதிப்புனல் - இ.பா
ஜெ.ஜெ சில குறிப்புகள் - சு.ரா
கோபல்ல கிராமம் - கி.ராஜநாராயணன்
வெற்றி நிச்சயம்,சொன்னார்கள் சொன்னார்கள் - சுகி.சிவம்
வாழ்க்கையே ஒரு வழிபாடு - இறையன்பு
பார்த்திபன் கனவு - கல்கி
இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா
Comments
நீங்கள் வாசிக்கும் புத்தகங்களைப்பற்றி எழுதினால், வாங்கலாமா என்று முடிவு செய்ய வசதியாகவிருக்கும்.
நன்றி!
-மதி
கண்டிப்பாக நான் இலைகளை வியக்கும் மரம் பற்றி ஒரு கட்டுரை எழுதுவேன்.
உங்களுக்கு அப்போது தெரியப்படுத்துகிறேன்.